மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 January, 2023 10:17 AM IST
Family pension

இறந்துபோன அரசு ஊழியரின் கணவன் அல்லது மனைவி வேறு ஒரு பிள்ளையை தத்தெடுத்து கொண்டால், அந்த பிள்ளை குடும்ப பென்சன் (Family Pension) பெறுவதற்கு தகுதி அற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குடும்ப ஓய்வூதியம் (Family Pension)

இறந்துபோன அரசு ஊழியரை சார்ந்திருக்காதவர்களை குடும்பம் என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியாது என நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஸ்ரீதர் சிமுர்கார். இவர் இறந்தபிறகு அவரது மனைவி ஒரு மகனை தத்தெடுத்துள்ளார். அவரின் பெயர் ஸ்ரீராம். இதையடுத்து, ஸ்ரீராம் தனக்கு உரிய குடும்ப பென்சன் வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்துவிட்டார்.

இந்நிலையில், கடைசியாக அவரை, மறைந்த ஸ்ரீதர் சிமுர்காரின் குடும்பம் எனவோ, அவரை சார்ந்தவர் எனவோ கருத முடியாது என கூறி குடும்ப பென்சன் வழங்க அனுமதி மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம். இவ்விவகாரம் முதலில் மும்பை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீராமை ஸ்ரீதரின் மகன் என கருதி குடும்ப ஓய்வூதியம் வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மும்பை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

பின்னர் இவ்வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்துக்கு சென்றபோது, மும்பை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஸ்ரீராம். இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சட்டத்தின்படி, ஸ்ரீராமை ஸ்ரீதரின் குடும்பம் என கருத முடியாது என கூறி அவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க அனுமதி மறுத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நற்செய்தி: விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும்!

பழைய பென்சன் திட்டத்தில் இருக்கும் ஆபத்து: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

English Summary: No more family pension for them: Supreme Court action order!
Published on: 20 January 2023, 10:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now