சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 25 September, 2022 7:23 PM IST
Fertilizer Scarcity

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாம்பா சாகுடிபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க உரங்கள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் நகர் பகுதியில் உள்ள மேலாண்மை துறையின் உரக்கிடங்கு, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சம்பா பருவ நெல் விதைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை 312.7 மீ.மி மழை பெய்துள்ளது. இம்மழையினை கொண்டு விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 31 ஆயிரத்து 36 ஹெக்டர் வரை பயிர் விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடப்பு மாதத்திற்கு யூரியா 4,695 மெ.டன் ஒதுக்கீடு பெறப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக இருப்பு வைத்துக் கொள்ளும் வகையில் கிரிப்கோ யூரியா 1,500 மெ.டன் ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை 373.5 மெ.டன் கிரிப்கோ யூரியா கொண்டுவரப்பட்டது,

மேலும் தற்போது 30 மெ.டன் வரப்பெற்றுள்ளது. இதன் மூலம் 1579 மெ.டன் யூரியா, 1729 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 118 மெ.டன் பொட்டாஷ், 2570 மெ.டன் காம்ப்ளஸ், 50 மெ.டன் சூப்பர் பாஸ்பேட் என மேற்கண்ட உரவகைகள் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகளுக்கு எந்தவித உரத்தட்டுப்பாடு இன்றி நடப்பு சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான உரங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளன. விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி வேளாண் பணிகளை ஆர்வமுடன் மேற்கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க:

கொப்பரை கொள்முதல் காலம் நீட்டிப்பு - கலெக்டர் தகவல்

நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதி உதவி

English Summary: No More Fertilizer Scarcity – Collector Notice
Published on: 25 September 2022, 07:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now