அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 3 September, 2021 6:52 PM IST
No more Plastic in Tamil Nadu

பிளாஸ்டிக் தடையை விரிவுபடுத்தியும், இதை வெற்றிகரமாக செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய "மக்கள் இயக்கம்"  தொடங்க உள்ளதாகவும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் கொள்கை விளக்க குறிப்பில் எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகையான ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றில் தடை விதித்தது. இருப்பினும், அதனை திறம்பட செயல்படுத்த வில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் தடை வெற்றிபெற மேலும் விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக மன்றங்கள், வணிகர் சங்கங்கள், குடிமக்கள் அமைப்புகள், இவைகளின் பங்குதாரர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகள் மூலமாக மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்க இருப்பதாகவும் இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர்களின் ஆதரவுடனும், வழிகாட்டுதலுடன் பிளாஸ்டிக் தடை கடுமையாக்கப்படும் எனவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளின் கீழ், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான 100 மைக்கிரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பேனர்கள், தட்டுகள், கோப்பைகள் உள்ளிட்டவை 01.07.2022 முதல் பயன் படுத்த முடியாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 75 மைக்கிரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கை பை மற்றும் 60 கிராம் அளவிற்கு கீழ் நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகள் 30.09.2021 முதலும், 120 மைக்கிரான் தடிமனுக்கு கீழ்வுள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் 31.12.2022 முதலும் பயன்படுத்த தடை விதிக்க கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

மாடு மட்டுமே ஆக்ஸிஜனை வெளியேற்றும் விலங்கு! விஞ்ஞானிகள் !

தமிழகத்தில் திறந்த வேகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் அடைப்பு?

English Summary: No more Plastic in Tamil Nadu! New announcement of the Government of Tamil Nadu!
Published on: 03 September 2021, 06:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now