மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 September, 2021 8:29 AM IST
Ban on Plastic Products

உலகம் முழுவதிலுமே தற்போது பெரும் பிரச்சனையாக இருப்பது பிளாஸ்டிக் கழிவுகள் தான். இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்த பாடில்லை. கடலில் நீருக்கடியில் எண்ணற்ற அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கிக் கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 75 மைக்ரானுக்கு குறைவாக இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு.

சுற்றுச்சூழல் மானிய கோரிக்கையை அமைச்சர் மெய்யநாதன் சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் (Plastic) பொருட்களை பயன்படுத்தும் தடை நடைமுறையில் உள்ளது. இத்தடையை மீறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் திருத்தி அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2021 அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது.

Also Read : காலநிலை மாற்றத்தால் மதுரைக்கு பாதிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பிளாஸ்டிக்

இதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களான 100 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக், பிவிசி பேனர்கள், தட்டுகள், கோப்பைகள், உணவு உண்ணவும் பரிமாறவும் பயன்படும் பொருட்கள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது மொட்டுகள், அலங்காரத்திற்கான தெர்மோகால் பொருட்கள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள் முதலியவை 2020 ஜூலை முதல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை

75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் 60 கிராம் சதுர மீட்டர் அளவிற்கு கீழ் உள்ள நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள் வருகிற நவம்பர் 30 முதலும், 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் 2022 டிசம்பர் 31 முதலும் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி

விலையேற்றத்தால் கசக்கிறது இனிக்கும் காபி!

English Summary: No Plastic: Ban on plastic products less than 75 microns!
Published on: 05 September 2021, 08:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now