News

Friday, 29 November 2019 10:27 AM , by: Anitha Jegadeesan

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உட்பட கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை இருக்கிறது. அதேபோன்று தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

குமரிக் கடல் பகுதியில் சூறைக் காற்று விச வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் அந்தப் பகுதிக்கு செல்லவேண்டாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில்  6 செமீ மழையும்,  புதுச்சேரியில் 4 செமீ மழையும் பதிவாகி உள்ளது.  மண்டபம், திருச்செந்தூர், மதுராந்தகம், கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகி உள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)