மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 March, 2023 3:45 PM IST
NPCI clarify there is no charge between transfer in UPI

வாடிக்கையாளர்கள் தங்களது ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் கணக்கிலிருந்து வணிக ரீதியில் செயல்படும் வங்கிக்கணக்கிற்கு ரூ.2000 க்கும் மேல் பணம் செலுத்தினால் அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்கலாம் என தேசிய பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது. அதே சமயம், தனி நபர் மற்றொரு நபரின் கணக்கிற்கு பணம் அனுப்ப கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என தெளிவான அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (PPIs) மூலம் செய்யப்படும் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,000-க்கு மேல் அனுப்பினால் பரிமாற்றக் கட்டணத்தை இந்திய தேசிய பரிவர்த்தனை கழகம் (NPCI) பரிந்துரைத்துள்ளது. அந்த வகையில் எரிபொருளுக்கு 0.5%, தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் போன்றவற்றுக்கு 0.7%, பல்பொருள் அங்காடிக்கு 0.9%, Mutual Fund, அரசு, காப்பீடு மற்றும் ரயில்வே துறைக்கு 1% ஆக கட்டணம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

UPI பரிவர்த்தனைகளினால் வங்கிகள் மற்றும் கட்டண சேவை வழங்குநர்களுக்கு வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் பரிமாற்ற விலையானது செப்டம்பர் 30, 2023-க்குள் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPI தற்போது இந்தியாவில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் கட்டண முறை ஆகும், இது பயனர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்தி உடனடியாக வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணத்தை பரிமாற்ற அனுமதிக்கிறது. மறுபுறம், பிபிஐக்கள் டிஜிட்டல் பணப்பைகள் போன்றது. அதன்மூலம் பயனர்கள் பணத்தைச் சேமித்து மற்றொரு வங்கிக்கு பணம் செலுத்த அனுமதிக்கின்றன. இந்தியாவில் முன்னணியில் உள்ள UPI செயலிகள் paytm, PhonePe மற்றும் Google Pay ஆகும்.

பரிமாற்றக் கட்டணம் என்பது பரிவர்த்தனையைச் செயலாக்குவதற்கு ஒரு வங்கியால் மற்றொரு வங்கிக்கு விதிக்கப்படும் கட்டணமாகும். இனிமேல் UPI செயலிகள் மூலம் ரூ.2000 க்கு மேல் பணம் பரிமாறினால் கட்டணம் வசூலிக்கப்படும் என தவறான தகவல்கள் பரவிய நிலையில் தேசிய பரிவர்த்தனை கழகம் (NPCI) விளக்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு-

அறிமுகப்படுத்தப்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணம் மொபைல் வாலட்கள் போன்ற ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகளைப் (PPIs) பயன்படுத்தி ரூ.2,000க்கு மேல் பணம் செலுத்தும் வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெளிவுப்படுத்த விரும்புகிறோம். தனிநபர்களுக்கு இடையேயான பண பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாது.

NPCI இன் கூற்றுப்படி, முன்மொழியப்பட்ட பரிமாற்றக் கட்டணம் சந்தை உள்கட்டமைப்புகள் மற்றும் உலக வங்கியின் பரிந்துரைகளுக்கு ஏற்ப உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தவறான தகவல்களை இணையத்தில் பரவிய நிலையில் paytm சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

காளான் சாகுபடிக்கான அரசின் பிராண்ட் அம்பாசிடர்- மஸ்ரூம் லேடியின் வெற்றிக்கதை

English Summary: NPCI clarify there is no charge between transfer in UPI
Published on: 29 March 2023, 03:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now