News

Monday, 05 December 2022 05:47 AM , by: R. Balakrishnan

Old Pension Scheme

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளனர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதிநிதிகள்.

பட்ஜெட் (Budget)

2023ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை மத்திய நிதியமைச்சகம் தொடங்கிவிட்டது. இதற்காக கடந்த நவம்பர் 21ஆம் தேதி முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை பல தரப்புகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பழைய பென்சன் திட்டம் (Old Pension Scheme)

ஆலோசனைக் கூட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த தொழிற்சங்கங்களும் தங்கள் கருத்துகளை அரசிடம் முன்வைத்துள்ளன. அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தரப்பு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பிஎம் கிசான் (PM kisan)

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், பணவீக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும் எனவும் ஆர்.எஸ்.எஸ். தொழிற்சங்கமான பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க

அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் அகவிலைப்படி உயர்வு: அடுத்தடுத்து வரும் நற்செய்தி!

ரேஷன் கார்டில் புதிய வசதி: இனி டபுள் ஜாக்பாட் தான்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)