நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 May, 2023 9:07 AM IST
Old Pension Scheme

பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என மத்திய, மாநில அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பழைய பென்சன் திட்டம்

2003ஆம் ஆண்டு வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. 2004ஆம் ஆண்டு முதல் தேசிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பஞ்சாப், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு எதிர்காலத்தில் கடுமையான நிதி சுமை ஏற்படும் என ரிசர்வ் வங்கி அண்மையில் எச்சரித்திருந்தது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ET Awards நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, அவரிடம் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு நீண்டகால அடிப்படையில் நிதிச் சுமை ஏற்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

பென்சன் வாங்குவோருக்கு நற்செய்தி: பென்சன் தொகையை உயர்த்திய மாநில அரசு!

அனைத்து விவசாயிகளுக்கும் பிஎம் கிசான் திட்டம்: மத்திய விவசாய அமைச்சர் வேண்டுகோள்!

English Summary: Old Pension scheme is not possible: Finance Minister warning!
Published on: 01 May 2023, 09:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now