நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 November, 2022 7:14 PM IST
Old Pension Scheme

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தால், எதிர்கால வரி செலுத்துவோருக்கு சுமை அதிகரிக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி தெரிவித்துள்ளார்.

2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. இதில் அரசு ஊழியர்களுக்கு நிலையான பென்சன், மருத்துவப் படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைத்து வந்தன.

தேசிய பென்சன் திட்டம் (National Pension Scheme)

2004ஆம் ஆண்டு முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தேசிய பென்சன் திட்டம் (National Pension System) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் பென்சனுக்கான உத்தரவாதமும் இல்லை, இதர சலுகைகளும் இல்லை என அரசு ஊழியர்கள் புகார் கூறுகின்றனர்.

பழைய பென்சன் திட்டம் (Old Pension Scheme)

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றன. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் அண்மையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியும் உள்ளன.

தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதுகுறித்து இன்னும் எந்தவொரு அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. எனினும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பெரும் சுமை

இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தினால், எதிர்கால சந்ததியினர், அதாவது எதிர்கால வரி செலுத்துவோருக்கு கடும் சுமை ஏற்படும் எனவும், இந்தியா நிதி ஒழுங்கிலும், நிலையான வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மத்திய அரசுக்கான ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி தெரிவித்துள்ளார்.

சில மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது வருத்தம் அளிப்பதாகவும், இந்த நடவடிக்கை தற்போதைய வரி செலுத்துவோரை அல்லாமல் எதிர்கால வரி செலுத்துவோரை பாதிக்கும் எனவும் சுமன் பெரி தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடி

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் அரசுகளுக்கு ஏற்படும் நிதி சுமை குறித்து ஏற்கெனவே நிதி ஆயோக் ஆய்வு நடத்தி வந்தது. இந்நிலையில், பழைய பென்சன் திட்டத்தால் எதிர்கால சந்ததியினருக்கு நிதி சுமை அதிகரிக்கும் என நிதி ஆயோக் துணை தலைவர் சுமன் பெரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7th Pay Commission: விரைவில் சம்பள உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு!

பென்சன் தொகையை சேமிக்க நினைப்பவரா நீங்கள்? தங்க முதலீடு தான் பெஸ்ட்!

English Summary: Old Pension Scheme: Niti Aayog warns!
Published on: 27 November 2022, 07:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now