நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 March, 2023 2:47 PM IST
Old Pension Scheme

பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old pension scheme) மீண்டும் அமல்படுத்த திட்டம் இருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போதைய ஓய்வூதிய திட்டம் பற்றிய விவரங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த திட்டம் இருக்கிறதா என நாடாளுமன்ற மக்களவையில் சர்மிஷ்டா சேதி எம்.பி கேள்வி எழுப்பினார். இதற்கு நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் பதில் அளித்துள்ளார்.

பழைய பென்சன் திட்டம் (Old Pension Scheme)

2003 டிசம்பர் 22 தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவால் தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension System) அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு நிலையான முறையில் ஓய்வூதியம் வழங்கவும், சிறு சேமிப்புகள் வாயிலாக நல்ல முதலீடுகளை மேற்கொள்ளவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ராணுவ படையினர் தவிர அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 2004 ஜனவரி 1 முதல் தேசிய ஓய்வூதிய திட்டம் கட்டாயமாக்கப்பட்டது.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு தொகை அவர்களின் சம்பளத்தில் 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பங்களிப்பு தாமதமானால் அல்லது செலுத்தப்படவில்லை எனில் அதற்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. வருமான வரி சலுகைகளும் கிடைக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு இந்திய அரசின் பரிசீலனையில் எந்த திட்டமும் இல்லை என்று நிதித் துறை இணையமைச்சர் பகவத் காரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

15 நாட்களில் புதிய ரேஷன் அட்டை: கலெக்டர் அதிரடி உத்தரவு!

உச்சத்தில் தங்கம் விலை: 50,000 ரூபாய் வரை உயரும் என அதிர்ச்சித் தகவல்!

English Summary: Old Pension Scheme: This is the Central Government's Answer!
Published on: 21 March 2023, 02:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now