News

Wednesday, 05 January 2022 09:29 AM , by: Elavarse Sivakumar

Credit : Dailythanthi

அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு ஒமிக்ரான் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் (Omicron)

ஒமிக்ரான் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. அதிலும்
குறிப்பாக உலக வல்லரசு நாடான அமெரிக்காவை பதறவைத்து வரும் ஒமிக்ரான் முன்னெப்போதும் இல்லாத வகையில் அங்கு படுவேகமானப் பரவி வருகிறது.

புதிய உச்சம் (New peak)

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது.

கடந்த ஏழு நாட்களில் சராசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.13 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில், தினசரி பாதிப்பில் புதிய உச்சமாக, 10 லட்சம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு 10 லட்சம்  (Impact 10 lakhs)

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்களின்படி, 10,42,000 என்ற எண்ணிக்கையில் தொற்று ஏற்பட்டுள்ளது.

முந்தைய உச்சம் (Previous peak)

அமெரிக்காவில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி 5,72,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இது இதற்கு முன்பு இதுவரை இல்லாத பாதிப்பாக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கையை விட இரு மடங்கு தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க...

நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

ஒமிக்ரான் வேகமாக குறையும்: அமெரிக்க அறிவியலாளர் நம்பிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)