மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 December, 2021 9:38 AM IST
Credit : Dailythanthi

ஜனவரி மாதம் ஒமிக்ரான் அலை வீசக்கூடும் என தொற்று நோய் நிபுணர் டாக்டர் நரேஷ் புரோகித் வெளியிட்டுள்ள தகவல் உச்சக்கட்ட அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கே உலக மக்கள் ஆடிப்போனதுடன், ஆயிரக்கணக்கானோரின் உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. இதன் ஆட்டம் இன்னும் முடிவுக்கு வருமுன்பே, ஒமிக்ரான் வைரஸ் அலற வைத்து இருப்பதான், மானுட சோகம்தான்.

உருமாற்றம் (Transformation)

கடந்த 24-ந் தேதி முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில்தான் இந்த ஒமிக்ரான் தென்படத்தொடங்கியது. இது 50-க்கும் மேற்பட்ட உரு மாற்றங்களை கொண்டிருக்கிறது, அதிபயங்கரமானது.

70 மடங்கு வேகம் (70 times the speed)

உடனடியாக , ஜெனீவாவில் கூடி இந்த வைரஸ் பற்றி விவாதித்த உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு, 26-ந் தேதியே இந்த வைரஸ், கவலைக்குரிய திரிபாக (VOC) அறிவித்தது. இந்த ஒமிக்ரான், டெல்டா வைரசுடன் ஒப்பிடுகிறபோது 70 மடங்கு வேகத்தில் பரவும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. இதையடுத்து,உலகமெங்கும் ஒமிக்ரான் வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

இந்நிலையில் கேரளாவில் ஒமிக்ரான் பரவலை தடுக்கும் உத்திகள் பற்றி இணைய வழியில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பிரபல தொற்றுநோய் நிபுணரும், தேசிய தொற்றுநோய்கள் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகருமான டாக்டர் நரேஷ் புரோகித் கூறியதாவது:-

அதிர்ச்சித்தகவல்கள் (Shocking information)

  • ஒமிக்ரான் பரவலின் வேகம், டெல்டாவை விட அதிகம்.

  • டிசம்பர் 2-ந் தேதி இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு 2 பேருக்கு மட்டுமே இருந்தது. டிசம்பர் 14-ந் தேதி 45 பேருக்கு பாதிப்பு. 16-ந் தேதி 77 பேருக்கு பாதிப்பு. ஆக, 14 நாளில் 36 மடங்காக பெருகி உள்ளன.

  • ஜனவரியில் ஒமிக்ரான் அலை வீசக்கூடும்.

  • ஒமிக்ரான் நோயாளி சூப்பர் ஸ்பிரடர் ஆக மாறி, ஒமிக்ரானை வேகமாகப் பரப்பலாம்.

  • ஒமிக்ரான் ஏற்கனவே 77 நாடுகளுக்கு பயணித்திருக்கிறது. அதுவும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 3 வாரத்தில் இது நடந்திருக்கிறது.

  • ஒமிக்ரான் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும்கூட, காட்டுத்தீ போல பரவுவது, உலகமெங்கும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு பெருத்த சவாலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.

  • யாரும் ஒமிக்ரானை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

  • இன்னும் ஏராளமானவர்களை தொற்றுவதின் மூலம் மிகக்கொடிய நோயாக மாறலாம், மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.

தடுப்பூசி (Vaccine)

ஒமிக்ரான் வைரஸ், கடந்த கால நோய்த்தொற்றின் மூலம் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தி மற்றும் தடுப்பூசியால் கிடைத்த நோய்த்தொற்றுகளில் இருந்து தப்பிக்க முடியும். இதனால் ஒமிக்ரான் திரிபின் ஒட்டுமொத்த அச்சுறுத்தல் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் படிக்க...

கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை: உலக சுகாதார அமைப்பு தகவல்!

ஒமிக்ரான் பாதிப்பால் இங்கிலாந்தில் முதல் உயிரிழப்பு!

English Summary: Omicron wave peaking in January could cause death-
Published on: 18 December 2021, 09:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now