News

Wednesday, 03 November 2021 09:05 PM , by: R. Balakrishnan

One day leave per week for police

காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை அளிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக மக்களைக் காக்கும் காவலர்கள் விடுமுறை இல்லாமல் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வர வேண்டிய கட்டாயம் நிலவியது. இதனால் காவலர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் நோய்வாய்ப்படுவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. எனவே, காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை (One day leave per week) அளிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்தது.

காவலர்களுக்கு விடுமுறை

கடந்த ஆட்சியில் அவர்களின் கோரிக்கையை ஏற்கப்படாமலேயே இருந்தது. நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் காவலர்களுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. இந்நிலையில், காவலர்களின் பிரச்சனையை தீர்க்க எண்ணிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மானிய கோரிக்கை விவாதத்தின் போது காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பு காவலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து இன்று காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இனி 2ஆம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரை அனைவருக்கும் வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படும்.

மேலும் படிக்க

அரசு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!
வன விலங்குகளின் மருத்துவ சிகிச்சைக்கு 3 இடங்களில் மையங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)