News

Monday, 29 August 2022 12:45 PM , by: R. Balakrishnan

One Nation One Fertilizer

கடந்த வாரம் ஆகஸ்ட் 26 அன்று மத்திய அரசானது PMBJP (பிரதான் மந்திரி பாரதிய ஜானுர்வரக் பரியோஜனா) திட்டத்தின் கீழ் உர நிறுவனங்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கி வருகிறது. அதன் பலன்களை நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கும். எனவே, உரங்களின் பைகளில் PMBJP திட்டத்தின் லோகோவை வைக்குமாறு நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே உரம் (One Nation One Fertilizer)

இந்தியாவின் ‘ஒரே நாடு, ஒரே உரம்’ திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து உர நிறுவனங்களும் தங்கள் பொருட்களை ‘பாரத்’ என்ற பெயரில் விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உர நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளன. இது அவர்களின் வர்த்தக முத்திரை மற்றும் விவசாயிகளுடனான ஈடுபாடு ஆகிய இரண்டையும் பாதிக்கும் என உர நிறுவனங்கள் கூறுகின்றன.

உர நிறுவனங்கள் இதனை எதிர்க்க முக்கிய காரணமாக கூறப்படுவது மத்திய அரசின் கூற்றுப்படி புதிய பேக்கேஜிங் விதிமுறைகளின்படி உர பையில் 2/3 பங்கு இடத்தில் 'பாரத்' லோகோவைப் பயன்படுத்த வேண்டும் எனவும், அதே கார்ப்பரேட் பிராண்டிங்கிற்காக பையில் 1/3 இடத்தை பாரத் லோகோவை வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து இது குறித்து என்று இந்திய உர சங்கத்தின் (எஃப்ஏஐ) தலைவர் கே.எஸ்.ராஜு கூறுகையில் உரங்களுக்கான புதிய பேக்கேஜிங் விதிமுறைகளுக்கு விரைவில் மாற்றம் ஏற்படும் என்றும், மேலும் இந்த மாற்றத்தால் சந்தைப்படுத்தல் செலவுகள் உயராது எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி “தரப்படுத்தலுடன் புதிய முறையில் பைகள் அச்சிடப்பட்டு மிக விரைவாக விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் எனவும், விவசாயிகள் மற்றும் டீலர்கள் இதைப் பழக்கப்படுத்திக் கொள்வார்கள், ஏனென்றால் எல்லோரும் ஒரே காரியத்தைச் செய்வார்கள், ஒவ்வொரு நிறுவனத்தின் பிராண்டிலும் இந்த லோகோவானது குறுகிய வடிவத்தில் இருக்கும். எனவே, விநியோக மாதிரியில், பெரிய பாதிப்பு ஏற்படக்கூடாது,'' என்றும் கே.எஸ்.ராஜூ கூறியுள்ளார்.

மேலும் படிக்க

வீடு தேடி வரும் விதை நெல்: விவசாயத்தை மீட்டெடுக்கும் பட்டதாரி!

ஏலத்தில் நல்ல விலைக்கு போன எள்: ஈரோடு விவசாயிகள் மகிழ்ச்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)