இந்தியா முழுவதும் 'ஒரே நாடு ஒரே உரம்' என்ற புதிய திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த முடிவுசெய்துள்ளது. உர நிறுவனங்களின் பெயர்களுக்கு பதிலாக, எல்லா நிறுவனங்களும் உர மூட்டைகளை 'பாரத்' என்ற பெயரில்தான் விற்பனை செய்யவேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே உரம் திட்டம் என்றால் என்ன?
இந்தியா முழுவதும் யூரியா, டிஏபி, எம்ஓபி மற்றும் என்பிகே போன்ற எல்லா உரநிறுவனங்கள்ளும், 'பாரத்' என்ற பொது பெயரில்தான் உரத்தை விற்க வேண்டும்.பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி மற்றும் பாரத் என்பிகே போன்ற பெயர்களில்தான் இனி உரம் விற்கப்படும்.
மேலும், உர மானியத் திட்டத்தை குறிக்கும் ,முத்திரை, பிரதான்மந்திர பாரதிய ஜானுர்வரக் பரியோஜனா என்ற முத்திரைதான் உர மூட்டைகளில் பயன்படுத்தப்படவேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் தங்கள் பெயர், பிராண்ட், முத்திரை மற்றும் பிற தொடர்புடைய தயாரிப்புத் தகவல்களை தங்கள் பைகளில் மூன்றாவது பட்டியில் மட்டுமே காட்ட அனுமதிக்கப்படுகிறது.
இந்திய அரசு இந்த திட்டத்தை ஏன் கொண்டு வருகிறது?
அனைத்து மானிய உரங்களுக்கும் ஒரே 'பாரத்' முத்திரையை அறிமுகப்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் உரமான யூரியாவின் விலை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. அரசு நிர்ணயம் செய்யும் விலையில் அதை நிறுவனங்கள் விற்கின்றன. உரங்களின் உற்பத்திச் செலவில் 80-90 சதவீதத்தை உற்பத்தியாளர்களுக்கு அரசு மானியமாக வழங்குகிறது. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் உணவு மானியத்திற்கு அடுத்ததாக, உரத்திற்குதான் அரசு அதிகளவில் பணத்தை ஒதுக்கவேண்டியுள்ளது. அதாவது சுமார் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் அந்த மானியம் ஒதுக்கப்படுகிறது.
யூரியா தவிர, டிஏபி, எம்ஓபி போன்ற உரங்களின் விலையை அதிகாரப்பூர்வமாக அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை. ஆனாலும் அதற்கு மானியம் தரவேண்டியுள்ளது. மானியம் பெற்றாலும், உர நிறுவனங்களின் பெயரில்தான் உரம் விற்பனை ஆகிறது என்பதால், பெயரை பொது பெயராக மாற்றவேண்டும் என அரசு எண்ணுகிறது.
மேலும் படிக்க: