News

Wednesday, 04 December 2019 04:18 PM , by: Anitha Jegadeesan

அனைத்து மக்களும் பயன் அடையும் வகையில் "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" என்னும் திட்டத்தினை மத்திய அரசு அறிமுக படுத்தியது. ஜூன் மாதத்தில் அறிமுகப் படுத்திய திட்டமானது, வெளியூர்களில் வசிப்பவர்களுக்கு அதிக பயன் தரும் என கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் இத்திட்டம் குறித்த தகவலை வெளியிட்டார். வரும்  ஜூன் 1, 2020 முதல் நாடு முழுவதும் "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

மின்னணு பிஓஎஸ் Point of Sale (POS)  சாதனங்களில் ஆதார் எண் இணைக்கப்பட்ட பின்பு பயனாளிகள் இத் திட்டத்தினை உபயோகித்து கொள்ளலாம். தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களில்  வசிக்கும் நுகர்வோர்கள் அவர்களின் அட்டைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உணவுப் பொருள்களை தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அருகில் உள்ள நியாய விலைக் கடையிலும் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும். பயோமெட்ரிக் அல்லது ஆதார் மூலம் பயனாளிகளை அடையாளம் கண்டறிந்து பொருட்கள் வழங்கப்படும்.  

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)