நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 January, 2022 11:15 AM IST
Credit : Dinamalar

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

கொடூரக் கொரோனா (Cruel corona)

உலக நாடுகளை உலுக்கி எடுத்துவரும் கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. பல மாநிலங்களைக் கடந்த 2 ஆண்டுகளாகக் கொரோன வைரஸ் தொற்றுப் பதம்பார்த்து வருகிறது.

3-வது அலை (3rd wave)

இதைத்தொடர்ந்து ஒமிக்ரான் உட்படப் பல பெயர்களில் உருமாறிய வைரஸ் ஒரு புறம் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், கொரோனா வைரஸின் 3 வது அலை மாநிலத்தின் பல பகுதிகளில் ஆட்டம் காட்டி வருகிறது.

தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உட்பட, ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப் பட்டுள்ளன.மேலும், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேரடி வகுப்புகள்

அதேநேரத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், அதனைக் கருத்தில்கொண்டு, நேரடி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பெற்றோர் கோரிக்கை (Parents demand )

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், 10ம் வகுப்பு முதலான வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து விட்டு, ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

உயர்நீதிமன்றம் கருத்து (High Court opinion

இதனிடையே ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என, உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

விரைவில் அறிவிப்பு (Notice coming soon)

இவ்வாறாக எல்லாத் தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளதால், ஆன்லைன் வகுப்புகளை மட்டும் நடத்தலாமா என்பது குறித்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 - முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

சம்பா நெல் ரகங்களை மீட்டெடுக்கும் இயற்கை விவசாயி!

English Summary: Online class for 10th, 11th, 12th classes?
Published on: 13 January 2022, 11:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now