சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 3 September, 2021 7:28 PM IST
Jallikattu
Jallikattu

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகளில், நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையைச் சேர்ந்த சேஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது விடுதல் போன்ற போட்டிகளில், நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வெளிநாடு மற்றும் கலப்பின மாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

உத்தரவு

மனுவை விசாரித்த, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: தமிழக மக்களின் கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாப்பதில், ஜல்லிக்கட்டு (Jallikattu) விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டு இன மாடுகள் இருப்பதை ஜல்லிக்கட்டு உறுதி செய்கிறது. தமிழக அரசு ஏற்படுத்திய திருத்த சட்டத்தில், ஜல்லிக்கட்டு விளையாட்டில், நாட்டு இன மாடுகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவரிடம் சான்றிதழ்

நாட்டு இன மாடுகள் பற்றியே சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றை பாதுகாக்கவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைப்பதும் தான், சட்டத்தின் நோக்கம். கலப்பின மாடுகள், இறக்குமதி மாடுகள் இதில் வராது. நாட்டு இன மாடுகளுக்கு பெரிய திமில் இருக்கும்; வெளிநாட்டு மாடுகளுக்கு இருக்காது. அவை, ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தகுதி இல்லை. எனவே, ஜல்லிக்கட்டு விளையாட்டில் நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளை அனுமதிக்கக் கூடாது.

நாட்டு இன மாடுகள் தான், ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்கிறது என்று கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் (Certificate) பெற வேண்டும். நாட்டு இன மாடுகளை ஊக்குவிக்கும் விதமாக, விவசாயிகளுக்கு, மாடுகளின் உரிமையாளர்களுக்கு மானியம் (Subsidy), ஊக்க தொகையை அரசு வழங்க வேண்டும். செயற்கை முறை கருத்தரிப்பை, முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். இது, விலங்குகளுக்கான இயற்கையான உறவு உரிமையை மறுப்பது போலாகும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க

காலநிலை மாற்றத்தால் மதுரைக்கு பாதிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழகத்திற்கு 30.6 TMC நீரை உடனே திறக்க உத்தரவு: காவிரி நீர் மேலாண்மை ஆணையம்

English Summary: Only country cows are allowed in Jallikattu competitions
Published on: 03 September 2021, 07:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now