மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 February, 2023 12:24 PM IST
2500 rs Scholarship for women

மத்திய அரசு சார்பாக பெண் தொழில்முனைவோருக்கு உதவித்தொகை அளிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு, பெண்களுக்கும் பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக இவர்கள் தொழில் தொடங்க பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொழில் பயிற்சி (Training)

மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் பல்வேறு தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசு சார்பாக பயிற்சி நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் திறன் கொண்ட பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதிக அளவில் இளைஞர்கள் இருந்தாலும் திறன் கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இதை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையவராக இளைஞர்களை பயிற்சி அளிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் பெண்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்கள் சம்பாதிக்கும் விதமாக, முக்கியமாக திருமணம் ஆன பெண்களும் வருமானம் ஈட்டும் விதமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்கள் சுய தொழில், சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ளும் விதமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இதில்தான் உதவித்தொகையும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

உதவித்தொகை (Scholarship)

குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் வரை இருந்தால் பெண்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படும். இவர்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இவர்கள் மத்திய அரசின் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அந்த பயிற்சியின் மூலமாக தொழில் தொடங்கும் பட்சத்தில் இந்த உதவித்தொகை அளிக்கப்படும். பெண்கள் சுயமாக வேலைகளை செய்வதற்காக இந்த உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க

மினிமம் பேலன்ஸ்: எந்த வங்கியில் எவ்வளவு தொகை பராமரிக்க வேண்டும்?

பெண் குழந்தைகளுக்கு 50,000 ரூபாய் உதவித்தொகை: பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுப்பு!

English Summary: Only for them Rs. 2500 Scholarship: Central Govt Super Scheme Coming Soon!
Published on: 24 February 2023, 12:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now