சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 5 December, 2019 3:13 PM IST

மழை மற்றும் வரத்து குறைவால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு இருக்கிறது. தற்போது தமிழகத்தில்  சின்ன வெங்காயம் கிலோ 160 – 180 ரூபாய்க்கும்,  பெரிய வெங்காயம் கிலோ 100 – 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சாமானியர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் இவ்விலை உயர்வு பாதித்துள்ளது. இந்திய உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாலும், தேவை அதிகம் இருப்பதாலும் மத்திய அரசு துருக்கி மற்றும் எகிப்து நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

எதிர்கால தேவை மற்றும் விலை உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டு வெங்காய சாகுபடி பரப்பை அதிகரிக்க மத்திய அமைச்சரவை திட்டமிட்டுள்ளது. அனைத்து மாநில தலைமை செயலர்களுடன் நடந்த   ஆலோசனை கூட்டத்தில் வெங்காய சாகுபடி பரப்பை நாடு முழுவதும் அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து ஆராய பட்டன.

தமிழகத்தில் தற்போது 15 மாவட்டங்களில் வெங்காயம் சாகுபடி நடந்து வருகிறது. 50,000 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் சாகுபடியினை கூடுதலாக 75,000 ஏக்கரில் சாகுபடி செய்ய தேவையான முயற்சிகள் எடுக்கப் பட்டு வருகின்றன.  இதற்காக அரசு மானிய விலையில் விதைகள் இயற்கை உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் போன்றவற்றை வழங்கும் பணிகள் துவங்கி உள்ளன.

புதிதாக வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் இலவசமாக அமைத்து தரப்பட உள்ளன. மேலும் வெங்காயம் சாகுபடி செய்து 2 மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடுவதால் ஒரு ஏக்கர் பரப்பளவில்  60:40 என்ற விகித சாரத்தில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப் படுவார்கள். இதன் மூலம் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய இயலும்.

English Summary: Overcome Scarcity Govt Plans to increase onion cultivation area in tamilnadu
Published on: 05 December 2019, 03:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now