மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 November, 2021 11:38 AM IST
Credit : Dinamalar

சென்னை-மழையால் பாதிக்கப்பட்டு, உடல் இரண்டு துண்டாகும் நிலையில் உயிருக்குப் போராடிய நாக பாம்புக்கு, ஆக்சிஜன்முகமூடி வசதியுடன் அறுவை சிகிச்சை செய்து, வனத்துறையினர் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

வெள்ளத்தில் மிதந்தச் சென்னை (Chennai floating in the flood)

சென்னையில் கொட்டித் தீர்க்கும் கன மழையால், பல இடங்களில் மழை நீர் தேங்கி, மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தேங்கிய மழை நீரில் சாக்கடையும் கலந்துகொண்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரட்டூர் பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அங்கு சூழ்ந்திருந்த எலிக்கூட்டத்தை அகற்ற முற்பட்டபோது, பாம்புகளும் இருந்து தெரியவந்தது.

இயந்திரத்தில் சிக்கிய பாம்பு (Snake trapped in the machine)

இந்தப் பணிகளின்போது, எதிர்பாராதவிதமாக நாகப்பாம்பு ஒன்று இயந்திரத்திற்குள் சிக்கியது. இதனால், நாகப்பாம்பின் உடல் இரண்டு துண்டாகும் நிலை ஏற்பட்டது. தகவலறிந்த, வேளச்சேரி வன உயிரின பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்து சென்று, பாம்பை மீட்டனர்.

அறுவை சிகிச்சை (surgery)

மரணத்தின் விளிம்பில் இருந்த நாக பாம்புக்கு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வனத்துறை மருத்துவர்கள் முடிவு செய்தனர். அடையாறில் உள்ள சவான் என்பவரது மருத்துவமனையில், அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சையின் போது, மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க, பாம்பின் முகபகுதிக்கு ஆக்சிஜன் செல்லும் வகையிலான முகமூடி அணிவிக்கப்பட்டது.

மறுவாழ்வு (Rehabilitation)

அதன்பின், உடலின் வெட்டுப்பட்ட இடத்தில், காயத்துக்கு மருந்து செலுத்தி, தையல் போட்டு, அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் நிறைவு செய்தனர். பாம்பு நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விலங்குநேயம்

மரணத்தின் விளிம்புக்கு சென்ற நாகப்பாம்புக்கு, வனத்துறையின் சாதுர்யமான நடவடிக்கையால் மறுவாழ்வு கிடைத்துஉள்ளது. இதுவல்லவா ஐந்தறிவு ஜீவன்களுக்கு காட்டும் வனவிலங்குநேயம்.

மேலும் படிக்க...

இட்லிக்குள் தவளை - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்!

இப்படித்தான் இருக்கும் எலும்பும் தோலுமான சிங்கம்!

English Summary: Oxygen mask surgery for snake!
Published on: 29 November 2021, 11:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now