மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 May, 2021 11:53 AM IST

உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கியது. அங்கிருந்து மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும் ஆக்ஸிஜன் அனுப்பிவைக்கப்படுகிறது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை (Lack of oxygen)

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்றம் அனுமதி (Permission of the Supreme Court)

இதைத்தொடர்ந்து மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழக அரசும் அனுமதி அளித்தது.

320 பணியாளர்கள் (320 employees)

இதன் அடிப்படையில் உற்பத்திக்குத் தேவையான மின்சாரம், குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆக்ஸிஜன் உற்பத்தி பணியில், 320 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்ஸிஜன் உற்பத்தி (Oxygen production)

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று இரவில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கியது. ஆக்ஸிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக பிரத்யேக டேங்கர் லாரிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டன.

ஆக்ஸிஜன் விநியோகம் (Oxygen supply)

இன்று காலை 7 மணி அளவில் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆக்ஸிஜன் விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். 

முதற்கட்டமாக சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் அனுப்பி வைக்கப்பட்டது. கண்டெய்னர் லாரி மூலம் ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது:-

10 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் (10 metric tons of oxygen)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது விநியோகமும் தொடங்கி உள்ளது. 4.820 டன் ஆக்ஸிஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 3 முதல் 5 நாட்களுக்கு உற்பத்தி செய்யப்படும்.

தமிழகத்திற்குதான் (For Tamil Nadu)

சிலநாட்களில் 35 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அனைத்தும் தமிழகத்திற்கே விநியோகம் செய்யப்பட்டும்.

இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

மேலும் படிக்க...

தடுப்பூசியும் செயல் இழக்கலாம்! எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்!

கொரோனா சிகிச்சைக்கு உதவுகிறது பசுவின் பால்!

அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்

English Summary: Oxygen supply started in Sterlite - full production for TamilNadu!
Published on: 13 May 2021, 11:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now