News

Tuesday, 01 March 2022 08:13 AM , by: R. Balakrishnan

Paddy harvest started in Kambam

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள கம்பத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 60க்கு கொள்முதல் செய்கிறது. கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இரண்டாம் போக நெல் சாகுபடி (Paddy Cultivation) செய்யப்பட்டுள்ளது. கூடலூரில் துவங்கி பழனிசெட்டிபட்டி வரை நெல் சாகுபடி பரப்பாகும். கம்பம் பகுதியில் நடவு செய்வதில் முந்துவதால், அறுவடையும் முன் கூட்டியே துவங்கும்.

நெல் கொள்முதல் (Paddy Purchase)

சுருளிப்பட்டி ரோடு, சின்ன வாய்க்கால் பகுதிகளில் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரினர். அதை ஏற்று கம்பம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நெல் கொள்முதல் நிலையம் செயல்படத் துவங்கியுள்ளது. குவிண்டால் ரூ.2060க்கு அரசு கொள்முதல் செய்கிறது.

விவசாயிகள் ஆர்வத்துடன் கொள்முதல் நிலையம் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு நிர்ணயம் செய்த விலையே, இந்தாண்டும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடம் இருந்து அரசாங்கமே நேரடியாக நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நேரடி நெல் கொள்முதலுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள விலை வெளிச்சந்தை விலையைவிட ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் இங்கே விற்க விரும்புகிறார்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்(டி.என்.சி.எஸ்.சி) தனது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் இந்த கொள்முதலை மேற்கொள்கிறது.

மேலும் படிக்க

நெற்பயிாில் கதிர்நாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

மண்வளத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)