மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 January, 2022 12:11 PM IST
Paddy procurement works

பொங்கலுக்கு பின் நெல் கொள்முதல் மிக அதிகளவில் அதிகரிக்கும் என்பதால், விரைந்து கொள்முதல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளுடன் தயாராக இருக்குமாறு, வாணிப கழகத்தை, உணவு துறை அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது.

நெல் கொள்முதல் (Paddy Purchase)

தமிழகத்தில் அக்., 1 முதல் செப்., வரை நெல் கொள்முதல் சீசன். அதன்படி, 2021 அக்., துவங்கிய நடப்பு சீசனில், விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் 100 கிலோ எடை உடைய உயர்தர நெல்லுக்கு, மத்திய அரசு, 1,960 ரூபாயும்; சாதாரண நெல்லுக்கு 1,940 ரூபாயும் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்குகின்றன.

அவற்றுடன் சேர்த்து தமிழக அரசு உயர்தர நெல்லுக்கு, 100 ரூபாயும்; சாதாரண நெல்லுக்கு 75 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்குகிறது. முந்தைய சீசனில் 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நடப்பு சீசனில் 50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 1.13 லட்சம் விவசாயிகளிடம் இருந்து, 7 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

3,000 கொள்முதல் நிலையங்கள் (Paddy 

நெல்லை எடுத்து வந்து காத்திருப்பதை தவிர்க்க, எந்த தேதிக்கு வர வேண்டும் என்பதும் எஸ்.எம்.எஸ்., தகவலாக அனுப்பப்படுகிறது. நேரடி கொள்முதல் நிலையங்களை, விவசாயிகள் விரும்பும் இடத்தில் திறக்க, கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பின் நெல் கொள்முதல் அதிகரிக்கும்.

இதனால் விரைந்து கொள்முதல் செய்ய 3,000 கொள்முதல் நிலையங்கள் வரை திறக்கப்படும். தேவைப்பட்டால் கூடுதலாகவும் திறக்கப்படும். நெல் கொள்முதலில் 'கமிஷன்' கேட்பது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக, மண்டல முதுநிலை மேலாளர்களிடமும், சென்னையில் உள்ள வாணிப கழக உயரதிகாரிகளிடமும் புகார் அளிக்கலாம் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க

கணிணி கட்டுப்பாட்டில் விவசாயம்: எதிர்கால விவசாயம் எப்படி இருக்கப் போகிறது?

வரத்து அதிகரிப்பால் குறைந்தது தக்காளி விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

English Summary: Paddy procurement works in full swing!
Published on: 09 January 2022, 12:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now