News

Friday, 09 September 2022 08:44 AM , by: R. Balakrishnan

Paddy Rice Export

நெல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. ரஷ்யா உக்ரைன் போரால் உலகம் முழுவதும் உணவு பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. இதனிடையே கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து இருந்தது. இந்நிலையில் நாட்டில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசு நெல் அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடு விதித்துள்ளது.

நெல் அரிசி ஏற்றுமதி (Paddy Rice Export)

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் ரஷியா -உக்ரைன் போர் உலக அளவில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்தில் எரிசக்தி தட்டுப்பாடு, இலங்கையில் தேயிலை ஏற்றுமதி பாதிப்பு என இருநாடுகளுக்கு இடையேயான போர் சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

அத்துடன் உலக நாடுகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதற்கு உக்ரைன் -ரஷிய போர் மறைமுக காரணமாக அமைந்துள்ளது. இதன் விளைவாக நெல்லை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய உலகின் பல நாடுகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு நாட்டில் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் விதத்திலும், இவற்றின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கிலும் நெல், அரிசி ஏற்றுமதி்க்கு 20% வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

அடுத்த மாதத்தில் அமலுக்கு வருகிறது புதிய மின் கட்டணம்!

கோல்டன் சீதாப்பழ சாகுபடியில் அதிக வருவாய்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)