மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 September, 2021 8:52 PM IST
Paddy Seed Farm Inspection

ஆனைமலை ஒன்றிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, நெல் விதைப்பண்ணைகளில், விதை சான்றளிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், நடப்பாண்டு முதல் போகத்தில், 1,400 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதில், ஆனைமலை முக்கோணம் மற்றும் இந்திராநகர் பகுதிகளில், 25 ஏக்கரில் அரசு நெல் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உற்பத்தியாகும் நெல் விதை, தமிழகம் முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நெல் விதைப்பண்ணைகளை நேற்று முன்தினம், விதைச் சான்றளிப்புத் துறை உதவி இயக்குனர் வானதி தலைமையில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பொள்ளாச்சி விதைச்சான்று அலுவலர் நந்தினி, விதைச்சான்று உதவி அலுவலர் சின்னதுரை ஆகியோர் பங்கேற்றனர்.

விதைப் பண்ணைகள்

விதைச் சான்றளிப்புத் துறை உதவி இயக்குனர் வானதி கூறியதாவது: ஆனைமலை ஒன்றியத்தில், இந்தாண்டு குறுவை நெல் சாகுபடியில், அரசு மற்றும் தனியார் சார்பில், விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அரசு விதைப்பண்ணைகளில், 20 ஏக்கரில், கோ - 51 மற்றும் ஐந்து ஏக்கரில், ஏ.எஸ்.டி., - 16 ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆய்வு செய்ததில், நெல் பயிர்கள் நல்ல முளைப்புத்திறனுடன், மற்ற ரகங்கள் கலப்பின்றி உள்ளது.அரசு சார்பில் விதைப்பண்ணைகள் அமைக்கப்படும் போது, விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் விதைகள், இடுபொருட்கள் வழங்கப்படும். அறுவடையான நெல்ச விதைகள், கிலோவுக்கு, 30 ரூபாய் வரையில் விலை கொடுத்து, அரசே கொள்முதல் செய்து கொள்கிறது.சந்தையில், விவசாயிகளின் நெல்லுக்கு அதிகபட்சமாக, கிலோவுக்கு, 20 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைக்கிறது. விவசாயிகள் நெல் விதைப்பண்ணை அமைக்க முன்வரச வேண்டும்.

மேலும் படிக்க

நெற்பயிரில் தண்ணீர் நிர்வாகத்தை எப்படி மேற்கொள்ளலாம்?

சிறை வளாகத்தில் இயற்கை விவசாயம்: உற்பத்தியும் அதிகரிப்பு!

English Summary: Paddy Seed Farm Inspection: Government Purchase for Rs. 30 per Kg!
Published on: 16 September 2021, 08:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now