சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 5 March, 2021 6:46 PM IST
Paddy Straw
Credit : India Mart

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைக்கு அருகே உள்ள மடத்துக்குளம் பகுதியில், நெல் அறுவடை (Paddy Harvest) தொடங்கி நடந்து வரும் நிலையில், வைக்கோல் விற்பனை (Paddy straw sales) தீவிரமடைந்துள்ளது. அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் வைக்கோலானது கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாகப் (Fodder) பயன்படுகிறது. கால்நடை வளர்ப்பவர்கள், வைக்கோலை வாங்கி சேமித்து வைத்துக் கொள்வது வழக்கம். கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், கால்நடைகளின் (Livestock) தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது வைக்கோல் தான்.

கால்நடைத் தீவனம்:

உடுமலை, மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், நெல் பிரதான பயிராக உள்ளது. புயல் மற்றும் பருவம் தவறிய மழையால் மகசூல் குறைந்துள்ளது. அறுவடைப் பணிகளை இயந்திரங்கள் மூலம் தொடங்கினாள் விவசாயிகள். அறுவடைக்குப் பின் கிடைக்கும் வைக்கோல் (Paddy straw) கால்நடைகளுக்கு உலர் தீவனமாகப் பயன்படுகிறது. ஆண்டு முழுவதும் இருப்பு வைத்துப் பயன்படுத்தும் தீவனமாக உள்ளதால், இதற்கு எப்போதும் தேவை (Need) உள்ளது. நடப்பாண்டு அறுவடைக்கு பின்பு, வைக்கோல்கள் கட்டுகளாக விற்பனையாகிறது.

ஒரு கட்டு வைக்கோல் ரூ.225

தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால், பெரும்பாலான இடங்களில், இயந்திரங்கள் (Machines) வாயிலாகத் தான் அறுவடை நடக்கிறது. இதனால், வைக்கோல் கட்டு உருவாக்குவதற்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. வயலில் பரவிக்கிடக்கும் வைக்கோல் மீது, இயந்திரங்களை இயக்கும்போது அவற்றை ஒன்று சேர்த்து உருளை வடிவ கட்டுகளாக்குகின்றன.
ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள வைக்கோல், 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கட்டு உத்தேசமாக, ரூ.225க்கு கொடுக்கிறோம். ஒரு ஏக்கர் பரப்பில், 20 முதல் 25 கட்டு கிடைக்கிறது. பல மாவட்டங்களுக்கும், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்போரும் வைக்கோல் (Paddy straw) கட்டுகளை வாங்கி செல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மஞ்சள் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்!

தூத்துக்குடியில் பிசானப் பருவ நெல் அறுவடை தீவிரம்: மகசூல் குறைவால் விவசாயிகள் வேதனை

English Summary: Paddy straw sales start as harvest continues! Rs. 5,000 available per acre!
Published on: 05 March 2021, 06:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now