News

Tuesday, 26 July 2022 07:24 PM , by: R. Balakrishnan

Paytm facility in Mini Bus

அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, வேலுார் முதல் உமையஞ்செட்டிபாளையம் வரை மினி பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் டிக்கெட் கட்டணத்துக்கு 'பேடிஎம்' மூலம் பணம் செலுத்தும் முறையை, அதன் உரிமையாளர் ஜோதி அருணாசலம் செயல்படுத்தி உள்ளனர்.

பேடிஎம் (Paytm)

இதுகுறித்து, அவர் கூறுகையில், ''பயணிகளுக்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில்லறை தட்டுப்பாட்டால் ஏற்படும் தொல்லைகளுக்கு வாய்ப்பே இல்லை. இதனால், வங்கி கணக்கில் வசூல் தொகையை செலுத்த காத்திருக்கவும் தேவையில்லை,'' என்றார். மினி பஸ்சில் 'பேடிம்' சேவை அறிமுகமானது, பயணிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைனில் டிக்கெட் கட்டணம் செலுத்துவதால், சில்லரை பிரச்சனை இருக்காது. ஆனால், பேருந்தில் பயணம் செய்யும் அனைவரிடமும் பேடிஎம் அக்கவுன்ட் இருக்குமா? என்பதை உறுதி செய்வது அவசியமாகும்.

மினி பஸ் இயக்கத்தினால், அரசு பேருந்து போக்குவரத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பல மாவட்டங்களில் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்த வசதி பயணிகளுக்கு சவுகரியத்தை அளிக்கும். இருப்பினும், ஆன்லைனில் டிக்கெட் கட்டணம் செலுத்த பேருந்தில் வைஃபை வசதி இருந்தால் கூடுதல் அம்சமாக அமையும்.

மேலும் படிக்க

ஓவரா யோசித்து கவலை கொள்பவரா நீங்கள்: இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக சந்தைக்கு வரும் ஹோண்டா சிபி350 பிரிகேட்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)