News

Friday, 12 November 2021 04:28 PM , by: T. Vigneshwaran

40 Tasmac were closed In Chennai

சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பெட்டி கடைகள், மளிகை கடைகள் போன்ற சிறு கடைகளும் மழை பாதிப்பால் திறக்கப்படாமல் இருக்கிறது.

டாஸ்மாக் மது கடைகளும் 40 இடங்களில் மூடப்பட்டுள்ளன. கிண்டி, அடையாறு, தி.நகர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வேளச்சேரி, தேனாம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதோடு கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.

இதனால் மதுக்கடைகளை திறக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாலும் கடைகள் இயங்கவில்லை. 5 நாட்களாக மழைநீர் வடியாமல் இருப்பதால், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

மேலும் மது விற்பனையும் சரிவில் உள்ளது. மழையால் வருமானம் குறைந்ததால் மது பிரியர்கள் குடிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மது விற்பனை 50 சதவீதத்திற்கும் குறைவாகவே விற்கப்பட்டுள்ளது. கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மது விற்பனை மிகவும் மோசமான அளவில் இருந்ததாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க:

மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் - முழு விபரம்!

Gold Price: இன்று ரூ.1000 மலிவானது தங்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)