மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 April, 2021 1:13 PM IST

குணம், நடத்தை, சிறப்பு மற்றும் திறன் அடிப்படையில் தங்கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், மற்ற எதையும் கருத்தில் கொள்ளக் கூடாது எனவும் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

தெலங்கானா முன்னாள் தலைமை செயலாளர் திரு எஸ்.கே.ஜோஷி எழுதிய மக்கள் மைய ஆட்சி என்ற என்ற புத்தகத்தின் தெலுங்கு மொழி பெயர்ப்பான சுபரிபலனா’ என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத்தலைவர் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதற்கு குணம், நடத்தை, சிறப்பு, திறன் என்ற நான்கு விஷயங்கள் அவசியமானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த நான்கு விஷயங்களையும் சாதி, சமூகம், பணம், குற்றம் ஆகிய நான்கு விஷயங்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றன என்றார். மக்களை மையமாகக் கொண்ட ஆட்சி நிர்வாகம், நிர்வாகத்தை மையமாக கொண்ட வாக்காளரிடம் இருந்துதான் வரும் என்று அவர் நினைவுபடுத்தினார்.

மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கும், பல திட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்வதற்கும் நல்ல நிர்வாகம் அவசியமானது என குடியரசுத் துணைத்தலைவர் கூறினார். சிறந்த நிர்வாகத்துடன்தான் மகிழ்ச்சியும் வருகிறது என அவர் மேலும் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள், மக்களின் நம்பிக்கையை வைத்திருப்பவர்கள் என கூறிய திரு வெங்கையா நாயுடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும், மக்களுக்கு மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மக்களின் வாழ்க்கையை எளிதாக்க, அரசின் முயற்சிகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

இந்தப் புத்தகம் வெளிவந்ததற்காக, இதை எழுதிய டாக்டர் சைலேந்திர ஜோஷி, மொழி பெயர்ப்பாளர் திரு அன்னவரபு பிரம்மையா, வெளியீட்டாளர் திரு மாருதி ஆகியோரை திரு.வெங்கையா நாயுடு பாராட்டினார்.

English Summary: People must elect their representatives on Character, Conduct, Calibre and Capacity says Vice President
Published on: 02 April 2021, 01:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now