மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 November, 2020 6:02 PM IST
Credit : Dinakaran

வடகிழக்குப் பருவமழையினால் (Northeast monsoon) தமிழகம் முழுவதும், பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் குளங்கள், ஏரிகள் என் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில், அரியலூர் அருகே மழைக்கு சேறும் சகதியுமாக மாறிய சாலையில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் (seedling planting Struggle) நேற்று ஈடுபட்டனர்.

கனமழையால் சாலைகள் சேதம்:

அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் கடந்த 40 ஆண்டுகளாக சாலை வசதி (Road facility) செய்துதரப்படவில்லை. இதனால் மழைகாலங்களில் சாலைகள் சேறும் சகதியாக மாறிவிடுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த சாலையில் நடக்கும்போது சகதியில் வழுக்கி விழுகின்றனர்.

நாற்று நடும் போராட்டம்:

சாலை சீரமைப்பு செய்ய, பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு மனு அளித்தும் இதுவரை சாலைகள் சீர்செய்யப்படவில்லை. போதிய குடிநீர் வசதி (Drinking water facility) செய்துதரப்படாமலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படாததாலும் பொதுமக்கள் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று குடிநீர் எடுத்துவரும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் சேறும் சகதியுமாக மாறிய சாலையின் அவலநிலையை எடுத்துக்காட்டும் வகையில் சகதியான சாலையில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் (seedling planting Struggle) ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சாலையை சிரமைக்க வேண்டும். குடிநீர் வசதி செய்துதர வேண்டும் விலியுறுத்தினர். பொது மக்களின் இந்த வினோதமான நாற்று நடும் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா என்பது இனிதான் தெரியும்

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாய நிலங்களில் ஈரப்பதத்தை அளவிட புதியக் கருவி கண்டுபிடிப்பு! கோவை விஞ்ஞானிகள் 5 பேருக்கு தேசிய நீர் விருது

காங்கேயம் மாடுகளுக்காக தனிச்சந்தை! ரூ.12 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை!

English Summary: People who struggled to plant seedlings on the road! Details inside!
Published on: 17 November 2020, 06:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now