மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 January, 2022 8:51 AM IST
Credit : Maalaimalar

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாதற்கு, மோசமான வானிலையே காரணம் என முப்படை விசாரணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து (Helicopter crash)

கோவை மாவட்டம் சூலூரில் இருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் கடந்த டிசம்பர் 8-ந் தேதி குன்னூரில் விபத்துக்குள்ளானது. இதில் 14 பேரும் உடல்சிதறி உயிரிழந்தனர்.

சந்தேகம் (Suspicion)

நாட்டை துக்கத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணமா அல்லது சதிச் செயலா? என்ற சந்தேகம் எழுந்தது.

விசாரணை (Investigation)

இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய விமானப்படை தளபதி மானவேந்திரா சிங் தலைமையிலான முப்படை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அறிக்கைத்தாக்கல் (Reporting)

இந்தக் குழு தனது விசாரணையை நிறைவு செய்து சமீபத்தில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. முப்படை குழு விசாரணை அறிக்கையின் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டிசம்பர் 8-ம்தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய முப்படைக் குழு, அதன் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதில், ஹெலிகாப்டர் விபத்திற்கு இயந்திரக் கோளாறோ, நாசவேலையோ அல்லது கவனக்குறைவோ காரணம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை (Bad weather)

ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட திடீர் மேகக்கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததால் விபத்துக்குள்ளானது என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விமானப்படை தனது அறிக்கையில் கூறி உள்ளது.

மேலும் படிக்க...

கொரோனா வைரஸைத் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம்!

3ம் அலையை தடுக்க 3 முக்கிய காரணிகள்: மத்திய ஆலோசனை குழு!

English Summary: Pipin Rawat helicopter crash reported as bad weather
Published on: 15 January 2022, 08:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now