News

Thursday, 03 November 2022 06:34 PM , by: T. Vigneshwaran

Pitru Dosham

மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஆவூர். இங்கிருக்கும் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவபெருமான், பசுபதீஸ்வரர் என்ற பெயருடனும், அம்பாள் பங்கஜவல்லி என்ற நாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.

வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு, பூமிக்கு வந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற இடமாக இந்த திருத்தலம் பெயர்பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த ஊருக்கு ஆவூர் என்று பெயர் வந்ததாக சொல்லப்டுகிறது.

இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இங்கிருக்கும் பஞ்ச பைரவ மூர்த்திகள் சிலையாகும். இந்த 5 பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருப்பது தனிச்சிறப்பாகும்.

இந்த பஞ்ச பைரவ மூர்த்திகளை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால், அனைத்து துன்பங்களும் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். பஞ்ச பைரவ வழிபாடு என்பது, பிதுர் தோஷம் (இறந்து போன நமது முன்னோகளின் சாபம்) நிவர்த்திக்கு சிறந்ததொரு வழிபாடு என்பர். அதாவது, தந்தை மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர்.

பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள், இங்கிருக்கும் பைரவரை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. அத்துடன், சிலர் அதிக சம்பாதனை பெறவும் இங்கே வழிபாடு நடத்தலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

கடன் சுமை தீரவும், நல்ல வேலை வாய்ப்புகள் அமையாவும், வாழ்வில் அமைதி பெறுவதற்கும், பிதுர் தோஷம் நீங்கி வாழ்வில் மேம்பாடு அடைய இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டுது நல்பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க:

வீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்கலாம், எப்படி?

மீன் வளர்ப்பு குறித்து திருச்சியில் இலவச பயிற்சி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)