News

Thursday, 06 June 2019 05:54 PM

தெலுங்கானா விவசாகிகள் மேலும்  புதிய வகை விதைகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கி உள்ளது தெலுங்கானா வேளாண் பல்கலைகழகம். பேராசிரியர் ஜெய்சங்கர் வேளாண் பல்கலைகழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் 8 உயர்தரமான விதைகளை உருவாக்கி உள்ளனர். இதில் 3 நெல் விதைகளாகும் என்பது குறிப்பிட தக்கது.

ஒவ்வொரு விதைகளை பல்வேறு தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரத்தினை உறுதி செய்தது. 30-50 வரையிலான தர பரிசோதனை செய்து,  பின்பு மாநில வேளாண்துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என கூறினார்.

8 வகையான விதைகளில் 3 நெல் விதைகள் , மற்றவை ராகி, கம்பு, வேர்க்கடலை, ஜாவ்வ்ர் போன்றவை ஆகும். இதற்கு முன்பு இந்த பல்கலைகழகம் 17 வகையான விதைகளை உருவாக்கி உள்ளது. அதில் 8 வகைகள் நெல் விதைகளாகும்.

விரைவில் அரசின் தர சான்றிதல் பெற்று விவசாகிகளுக்கு விநியோகிக்க தயாராகி வருகிறது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

பொதுவாக விவசாகிகளுக்கு விநியோகிக்கும் விதைகள் 98% தரத்துடன் இருத்தல் அவசியமாகும். தற்போது உருவாக்கி உள்ள விதைகள் 95% தரத்துடன் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியுடன் மேலும் இரண்டு விதைகளை உருவாக்கி உள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்கு வேண்டி காத்திருக்கிறது. விரைவில் மேலும் புதிய விதைகள் வர உள்ளது.

Anitha Jegadeesan

Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)