நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 December, 2018 1:51 PM IST

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் நடைபெறும் இந்தப் புத்துணர்வு முகாமில் 30 யானைகள் வரை பங்கேற்றுள்ளன.

இந்த யானைகள் முகாமில் இருந்து நாள்தோறும் யானை சாணம் 2 டன் அளவுக்கு வெளியேற்றப்படும் நிலையில், 48 நாட்களுக்கு ஏறக்குறைய 96 முதல் 100 டன் சாணம் அகற்றப்படும். வீணாகும் அந்த சாணத்தின் மூலம் காகிதம் தயாரிக்கும் திட்டத்தை தமிழக இந்து அறநிலையத்துறை தொடங்கி இருக்கிறது.

யானையின் சாணத்தில் அதிகமான நார்சத்து இருப்பதால், அதை சுத்திகரித்து அதன் மூலம் காகிதம் தயாரிக்க எளிதாகப் பயன்படுத்து முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து இந்து அறநிலையத்துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் டி.கே. ராமச்சந்திரன் கூறுகையில், “யானையின் சாணத்தில் அதிகமான நார்சத்து இருக்கிறது. காகிதம் தயாரிக்கும் மூலப்பொருட்களுக்கு இந்த சாணம் ஏற்றது என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. யானையின் சாணத்தை இந்த முகாமில் இருந்து சேகரித்துச் சென்று, அதில் இருக்கும் நார்ச்சத்துக்களை மட்டும் தனியாக சுத்திகரித்துப் பிரித்து காகிதம் தயாரிக்க பயன்படுத்த உள்ளோம்.

அதற்கான தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. இதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டு அது வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆதலால், இந்தமுறை அதைச் செயல்படுத்த உள்ளோம். கடந்த முறை யானைகள் முகாமின்போது யானைகளின் சாணம் விவசாயிகளின் நிலங்களுக்கு உரமாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த முறை காகிதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

English Summary: Planning to produce papers from Elephant Dung
Published on: 18 December 2018, 01:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now