மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 February, 2021 8:47 PM IST
Credit : Dinamalar

பொதுவாக அனைவரும் காலையில் எழுந்தவுடன் டீ (Tea) குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் அதிகம் பேர். வேலை நேரங்களில் டீ குடிப்பதற்காக தனிநேரம் ஒதுக்குவார்கள். அந்த அளவிற்கு டீ நம் மக்களிடையே கலந்து விட்ட ஒன்று. பால் பாக்கெட்டுகளை சூடான பாத்திரங்களில் வைக்கும் போது, பிளாஷ்டிக் உருகி பாலுடன் கலந்து விடுகிறது. இதனை நாம் குடித்தால் புற்றுநோய் (Cancer) வரும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இனி, வெளி இடங்களில் டீ குடிக்கையில் அதிக கவனம் தேவை என்கிறது உணவு பாதுகாப்புத்துறை.

பிளாஸ்டிக் பால்: எச்சரிக்கை:

வெளி இடங்களில் உள்ள பாலகங்கள் மற்றும் டீக்கடைகளில் (Tea Stall), சூடான பாத்திரங்களின் மீது பால் பாக்கெட்டுகளை வைத்து சூடாக்கும் நிலை தொடர்கிறது. இக்கடைகளில் டீக்குடிப்பவர்களுக்கு, இதனால் உடல் நலன் கெடும் என்பதால், இவற்றை காணும் பொதுமக்கள் புகார் (Complaint) அளிக்க, உணவு பாதுகாப்புத்துறை (Department of Food Safety) அறிவுறுத்தியுள்ளது.
டீக்கடை, பேக்கரிகளில் கொதிக்கும் பால் பாத்திர மூடியின் மீது, பால் பாக்கெட்டுகளை (Milk Pocket) வைத்திருப்பதை, அனைவரும் பார்த்திருப்போம். இவ்வாறு, சூடான பாத்திரத்தின் மீது பால் பாக்கெட்டுகள் வைப்பதால், அவை நெகிழ்ந்து பல்வேறு ரசாயன மாற்றங்களை (Chemical Reactions) ஏற்படுத்தக்கூடியதாக மாறுகிறது. இப்பால் அல்லது டீயை குடித்தால், புற்றுநோய் (Cancer) ஏற்படவும் வாய்ப்புள்ளதாக, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

கடுமையான நடவடிக்கை

உணவு பாதுகாப்புத்துறைக்கு கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், நேற்று அதிகாரிகள் அவிநாசி சாலையிலுள்ள, பத்துக்கும் மேற்பட்ட கடைகளில், ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுகளின் போது, சூடான பாத்திரத்தின் மீது பால் பாக்கெட் வைத்திருந்த கடைகளுக்கு, உடனடியாக எச்சரிக்கை (Warning) விடுத்து, நோட்டீஸ் வழங்கப்பட்டது.தொடர்ந்து, நாளிதழில் தின்பண்டங்களை மடித்துக்கொடுப்பது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அபராதம் (Penalty) விதிக்கப்பட்டது.

சூடான பாத்திரங்களின் மீது, பால் பாக்கெட் வைப்பதால், பிளாஸ்டிக் உருகி (Melt) பாலுடன் கலக்கும் வாய்ப்பு அதிகம். இதனால், பொதுமக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவர். பாலகங்கள், டீக்கடை, பேக்கரிகளில் இதுபோன்று செய்வது தெரிந்தால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இனி பேக்கரிகளில், இது போன்று பால் பாக்கெட்டுகளை சூடான பாத்திரங்களின் மீது வைத்திருப்பதை பொதுமக்கள் காண நேர்தால், உடனடியாக புகார் அளிக்கலாம். விதிமீறல் (Violation) கண்டறியப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறினார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வறண்டு போனாலும், தண்ணீர் நின்றாலும் நிரந்தர வருமானம் தரும் கோரை சாகுபடி!

விவசாயிகளின் புதிய திட்டம்! போட்டோ போராட்டம் விரைவில் ஆரம்பம்!

English Summary: Plastic milk in tea shops! Food Safety Department warns the public!
Published on: 08 February 2021, 08:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now