மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 September, 2020 10:17 AM IST

கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட உதவி வேளாண் பெண் அலுவலர் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் திட்டம் 

பிரதமரின் கிசான் சம்மான் நிதி (PM-Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான 6-வது தவணையை கடந்த ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டது.

இத்திட்டத்தில், விவசாயிகள் போர்வையில், போலியான நபர்களை தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் சேர்ந்து முறைகேடு செய்திருப்பது அம்பலமானது. இந்த முறைகேடு தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, முறைகேடாக அளிக்கப்பட்டத் தொகை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

பிரதமரின் கிசான் திட்டத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயி அல்லாதவர்கள் போலியாக சேர்க்கப்பட்டிருப்பது குறித்து, விழுப்புரம் மாவட்ட, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த விசாரணையில், வல்லம் வட்டார உதவி வேளாண் அலுவலரான, திண்டிவனத்தைச் சேர்ந்த பிரியா, விவசாயி அல்லாதவர்களை கிசான் திட்டத்தில் இணைத்தது தெரிய வந்தது. இதேபோல், அணிலாடியைச் சேர்ந்த பிரிட்டாமேரி, ஹென்றி, கல்லடிக்குப்பத்தை சேர்ந்த ராமலிங்கம், புரோக்கர்களாக செயல்பட்டு, முறைகேடாக, 3,000 நபர்களை இத்திட்டத்தில் சேர்த்து உள்ளனர்.

4 பேர் கைது (Arrested)

இதையடுத்து, உதவி வேளாண் அலுவலர் பிரியா உள்ளிட்ட நான்கு பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

10 ஆயிரம் பேர் சேர்ப்பு

இதனிடையே பீகார், ராஜஸ்தானைச் சேர்ந்த வெளி மாநிலத்தவர்கள் 10 ஆயிரம் பேர் இந்தத் திட்டத்தில் தமிழக விவசாயிகளாகச் சேர்க்கப்பட்டிருப்பது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிசான் முறைகேட்டில், தோண்டத் தோண்ட இன்னும் பூதாரகமான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

மேலும் படிக்க...

எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை கொட்டும் - விபரம் உள்ளே!!

கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்- நிவாரணம் தரும் இயற்கை மருந்துவம்!

English Summary: PM KISAN: 4 arrested, including female officer, in Kisan scam
Published on: 30 September 2020, 10:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now