நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 August, 2022 10:52 AM IST
PM Kisan eKYC

நாட்டிலுள்ள ஏழை எளிய விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற விவசாய நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணைகளாக 6000 ரூபாய் வழங்கப்படும். ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என, விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கே இந்தப் பணம் அரசு தரப்பிலிருந்து நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

பிஎம் கிசான் (PM Kisan)

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 11 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. அடுத்து 12ஆவது தவணை எப்போது கிடைக்கும் என்று பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். சமீபத்திய அப்டேட்டின்படி, வருகிற நவம்பர் 30ஆம் தேதிக்குள் 12ஆவது தவணைப் பணம் வரும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கு பயனாளிகள் தங்களது கேஒய்வி அப்டேட்டை முடிப்பது அவசியமாகும். இது ஆதார் மற்றும் மொபைல் நம்பரை அடிப்படையாகக் கொண்ட ஒரு சரிபார்ப்பு முறையாகும். பயனாளிகள் அனைவரும் தங்களுடைய பிஎம் கிசான் கணக்கில் ஆதார் மற்றும் மொபைல் நம்பர் சரிபார்ப்புக்கு உட்பட வேண்டும்.

கேஒய்சி அப்டேட் (KYC Update)

பிஎம் கிசான் கேஒய்சி சரிபார்ப்புக்கு முதலில் ஜூலை 31 வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் நிறையப் பேர் இந்த காலத்தில் வேலையை முடிக்காததால் மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. அதாவது, ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் பயனாளிகள் அனைவரும் தங்களுடைய கேஒய்சி அப்டேட்டஒ முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் கிடைக்காது. https://exlink.pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற லிங்க்கை கிளிக் செய்து கேஒய்சி அப்டேட்டை நீங்கள் முடிக்கலாம்.

மேலும் படிக்க

கிசான் மகா பஞ்சாயத்து சார்பாக போராட்டம் நீடிக்கும் பதற்றம்

மின் கட்டண உயர்வுக்கு காரணமே மத்திய அரசு தான்: மின்வாரியம் அறிவிப்பு!

English Summary: PM Kisan: Central government warns farmers!
Published on: 27 August 2022, 10:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now