சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 11 September, 2019 5:18 PM IST
Farmer Scheme

பிரதான மந்திரி ஓய்வூதிய திட்டம்

சிறு மற்றும் குறு விவசாகிகளுக்கு மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுக படுத்திருந்தது. அதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் முதல் விவசாகிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து விவசாகிகளும் இதில் இணையலாம். அவர்கள் செலுத்தும் பிரிமியம் தொகைக்கு இணையான தொகையினை அரசும் செலுத்தும். 60 வயதுக்கு பிறகு மாதம் தோறும் ரூ 3000/-  ஓய்வூதியமாக வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

நாளை (செப்டம்பர் 12)  பிரதம மந்திரி மோடி ராஞ்சியில் இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார். 5 கோடி விவசாகிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளார்கள்.  விவசாகிகள் கொடுக்கும் தொகைக்கு இணையான தொகையை அரசும் செலுத்தும்.

பிரீமியம் விவரங்கள்


ஓய்வூதிய திட்டதின் சிறப்பம்சங்கள்

  •  18 முதல் 40 வயதுக்குள் இருக்கும் அனைத்து சிறு,குறு விவாசகிகள் இதில் இணையலாம். 40 வயதை கடந்த விவசாயகிகள் மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.
  • PM - கிஷான் யோஜனா திட்டத்தில் இணைந்து பயன் பெறுபவர்கள் எனில் ஓய்வூதிய திட்டதிற்கான பிரீமியத்தை நேரடியாக இதிலிருந்து செலுத்திக் கொள்ளும் வசதி உள்ளது. விவசாகிகள் கையிலிருந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • பிரீமியத்தை மாதமாதம், 3 மாதம், 6 மாதம், 1 வருடம் என விருப்பப்பட்ட முறைகளில் செலுத்தி கொள்ளலாம்.
  • திட்டத்தில் ஒருமுறை இணைந்தவர்கள் தொடர விருப்பமில்லை என்றால் 5 வருடங்கள் கழித்து கட்டிய தொகை மற்றும் அதற்கான வட்டி அனைத்தும் சேர்த்து கொடுக்கப் படும்.    
  • இந்த திட்டம் நிறைவடையும் முன்பே விவசாகிகள் இறந்து விட்டால் அவருடைய மனைவி இத்திட்டத்தை தொடரலாம். இல்லையெனில் கணவர் கட்டிய தொகையுடன் சிறிது வட்டியும் சேர்த்து மனைவிக்கோ அல்லது அவர்களது வாரிசுகளுக்கு போய் சேரும்.
  • ஓய்வூதியம் பெற்று கொண்டிருக்கும் விவசாயி இறந்தால் அவரது மனைவிக்கு 50% அதாவது ரூ 1500/- வழங்கப்படும்.
  • கணவனோ, மனைவியோ உயிருடன் இல்லையெனில் அவரது பணம் ஓய்வூதிய நிதியில் வரவு வைக்கப் படும்.
  • ஒரு குடும்பத்தில் உள்ள கணவனும்,  மனைவியும் தனித்தனியாக விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்
  • அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தில் சேர இயலாது.

https://tamil.krishijagran.com/news/kisan-credit-card-scheme-cover-one-crore-farmers-under-this-scheme-within-in-next-100-days/

https://tamil.krishijagran.com/news/centre-starts-registration-for-pradhan-mantri-kisan-maan-dhan-yojana-pm-kmy/

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: PM Kisan Maandhan Yojana: Have you aware of benefits and premium details?
Published on: 11 September 2019, 05:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now