மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 October, 2020 1:45 PM IST

பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்த விவசாயிகளுக்கு மத்திய அரசு சில கூடுதல் சலுகைகள் வழங்குகிறது. இதன் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு 42,000 பெறலாம்.

பி.எம் கிசான் திட்டம்

பிரதமரின் கிசான் சம்மான் நிதி(PM-Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் இணைந்துள்ள விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது

விவசாயிகள் PM-Kisan Yojana திட்டத்தின் கீழ் கணக்கைத் திறக்கும்போது, அவர்கள் தானாகவே PM கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறார்கள். இது ஓய்வூதிய திட்டமாகும், இதன் மூலம் விவசாயிகள் தங்களின் ஓய்வூதிய வயதை அடையும் போது விவசாயிகளுக்கு ஓய்வூதிய வடிவில் மாதத்திற்கு 3000 ரூபாய் வீதம் வருடத்தில் 36,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

பிரதமர் கிசான் மன்தன் யோஜனா என்றால் என்ன?

பிரதமர் கிசான் மன் தன் யோஜனா என்பது நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்கும் அரசு திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், ஒரு விவசாயிக்கு 60 வயதிற்குப் பிறகு மாதத்திற்கு ரூ .3000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது, அதாவது ஆண்டுக்கு ரூ .36,000. இப்போது வரை லட்சக்கணக்கான விவசாயிகள் பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவின் பயனைப் பெற்று வருகின்றனர்.

PM-KMY விதிமுறைகள்

18 முதல் 40 வயதுக்குட்பட்டும், இரண்டு ஹெக்டேர் வரை சாகுபடி செய்யக்கூடிய நில உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் இனையும் விவசாயி அவரின் வயதுக்கேற்ப மாதம் தோறும் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பணம் செலுத்த வேண்டும்.

PM - Kisan பயனாளிகளுக்கான கூடுதல் நன்மை என்ன?

60 வயதை அடையும் ஒரு விவசாயிக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 3000 வழங்கப்படும் இதோடு ஆண்டுக்கு மூன்று தவணைகளில் ரூ. 6000 பி.எம் கிசான் திட்டத்தின் படி வழங்கப்படுகிறது. இந்த மூலம் 60 வயதை அடையும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ .42,000 கிடைக்கும். இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

பி.எம் கிசான் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்திற்கு என எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியில் பதிவு செய்யும் நேரத்தில் உங்கள் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் அரசாங்கத்திடம் டெபாசிட் செய்யப்படுகின்றன.

விவசாயிகள் பி.எம் கிசான் திட்டத்தில் இணையும் போது ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கான விருப்பத்தை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் இந்த பயனை பெறலாம்.

மேலும் படிக்க..

விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல்!

காற்று மாசுபாட்டை தடுக்க டிராக்டர்களுக்கும் நெறிமுறைகள் வகுப்பு!

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்திறங்கிய 45000டன் யூரியா உரம்! விரைவில் விநியோகம் தொடக்கம்!

English Summary: PM Kisan scheme beneficiaries to get 42,000 per year - All details inside
Published on: 09 October 2020, 04:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now