நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 September, 2023 10:37 AM IST
PM kisan scheme- important announcement for farmers

பி.எம்.கிசான் திட்டத்தில் பயனடைந்துவரும் விவசாயிகள் வருகின்ற 10.09.2023-க்குள் இ-கே.ஓய்.சி (e-KYC) செய்திட வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம், இஆப., தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (PM kisan சம்மான் நிதி) 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பி.எம். கிசான் திட்டத்தில் பயனடைந்து வரும் சேலம் மாவட்ட விவசாயிகள் வருகின்ற 10.09.2023-க்குள் இ.கே.ஓய்சி (e-KYC) செய்திட வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம், இஆப., தெரிவித்துள்ளார். அவற்றின் முழுவிவரம் பின்வருமாறு-

இதுவரை விவசாயிகள் பி.எம்.கிசான் (PMKISAN) திட்டத்தில் சேர்ந்த நாளிலிருந்து 1 முதல் 14 தவணைகள் வரை தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. இ.கே.ஒய்.சி (e-KYC) என்பது மின்னணு முறையில் உங்கள் வாடிக்கையாளரை அல்லது விவசாயியை தெரிந்து கொள்ளுங்கள் என்பதன் சுருக்கம் ஆகும். ஆகவே பி.எம்.கிசான் திட்டத்தில் இ.கே.ஓய்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 15-வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். இதன்படி முதல் வழிமுறையாக தங்களது ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் www.pmkisan.gov.in  தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஒ.டி.பி.மூலம் சரி பார்த்திடலாம்.

இரண்டாம் வழிமுறையானது ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களது விரல்ரேகை பதிவு செய்து விவரங்களை சரிபார்த்திடலாம்.

மூன்றாவது வழிமுறை என்பது பி.எம்.கிசான் செயலி மூலமாக முக அடையாளம் கொண்டு இகே.ஒய்.சி செய்யலாம். மேலும் அருகிலுள்ள இந்தியா போஸ்ட்பேமண்ட் பேங்க் கிளையை அணுகி ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகள் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் திட்ட வலைதளத்தில் இ.கே.ஒய்.சி செய்திட வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் 15-வது தவணை தொகை பெறுவதற்கு 13,170 பயனாளிகள் e-KYC செய்திடாமல் நிலுவையில் உள்ளனர். நிலுவையில் உள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி மேற்குறிப்பிட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்து இத்திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம், இஆ.ப. தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

6 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வறட்சி நிவாரண நிதி

நீட்ஸ் திட்டம்- டிராக்டர் வாங்க மானியத்துடன் கூடிய கடனுதவி!

English Summary: PM kisan scheme important announcement for farmers
Published on: 06 September 2023, 10:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now