News

Wednesday, 26 October 2022 07:43 AM , by: R. Balakrishnan

PM Kisan e-KYC

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பிஎம் கிசான்) திட்டத்தின் 12ஆவது தவணை இன்னும் பல விவசாயிகளின் கணக்கில் வரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்கில் 2000 ரூபாயை வழங்கியுள்ளார். ஆனால் இன்னும் பல விவசாயிகள் இந்தப் பணத்தைப் பெறவில்லை. ஒருவேளை உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால் என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பிஎம் கிசான் (PM Kisan)

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நடைபெறும் மோசடிகளை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் உள்ள லட்சக்கணக்கான தகுதியற்றவர்கள் அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் eKYC என்ற வசதி அரசால் தொடங்கப்பட்டுள்ளது. எனவே பிஎம் கிசான் கணக்கில் eKYC செய்யப்படாத விவசாயிகளுக்கு பணம் வராது.

12ஆவது தவணைப் பணம் அக்டோபர் 17ஆம் தேதி விவசாயிகள் கணக்கில் விடுவிக்கப்பட்டது. இப்பணி இன்னும் ஒரு மாதத்துக்கு தொடர்ந்து நடைபெறும். அதாவது, நவம்பர் 30ஆம் தேதிக்குள் தகுதியுள்ள விவசாயிகள் அனைவருக்கும் தவணைப் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் உங்களுடைய கணக்கில் பணம் வந்துவிட்டதா என்பதைப் பார்க்க வேண்டும். ஒருவேளை சில காரணங்களுக்காக பணம் வராமல் போகலாம். அதுகுறித்த நிலவரத்தை பிஎம் கிசான் இணையதளத்திலேயே நீங்கள் பார்க்கலாம்.

முதலில் https://pmkisan.gov.in/ என்ற வெப்சைட்டில் செல்லவும். இதற்குப் பிறகு, நீங்கள் பயனாளியின் நிலையை (https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx) கிளிக் செய்ய வேண்டும்
இப்போது உங்களுடையள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்ட பிறகு கேப்ட்சா குறியீட்டை நிரப்பி சமர்ப்பிக்கவும்.

மேலும் படிக்க

பென்சன் காலத்தில் உங்களுக்கு உதவும் தங்க சேமிப்புத் திட்டம்: பல லட்சங்களில் இலாபம்!

PM Kisan திட்டம்: போஸ்ட் ஆபிஸ் போனாலே போதும் விவசாயிகள் இதைச் செய்ய!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)