News

Friday, 15 October 2021 06:58 PM , by: R. Balakrishnan

Pond rehabilitation work

கிராமங்களில் உள்ள, குட்டைகளை சீரமைத்து, மரக்கன்றுகள் நடும் பணிகளால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முந்தைய 2006 - 2011 தி.மு.க., ஆட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், குட்டைகள் (Ponds) துார் வாரப்பட்டு, கரைகளை சுற்றி தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன. அக்குட்டைகளில், 'பேபி பாண்ட்' எனப்படும், நீர் தேக்க அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

இவை போதிய அளவு பராமரிக்கப்படாததால், துார்ந்து குப்பை கொட்டுமிடமானது. தற்போது, குட்டைகளை சீரமைத்து, கரைகளில் மரக்கன்றுகள் நட, அரசு உத்தரவிட்டுள்ளது.

மரக்கன்றுகள் நடும் பணி

சூலூர் வட்டாரத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்ட குட்டைகளில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அரசூர், முதலிபாளையம், மயிலம்பட்டி, காடாம்பாடி உள்ளிட்ட கிராமங்களில், உள்ள குட்டைகளில் உள்ள குப்பை மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு, தடுப்பு சுவர்களுக்கு வெள்ளை அடிக்கப்பட்டு, கரைகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடக்கிறது.

நிலத்தடி நீர்மட்டம்

அரசூர் ஊராட்சி பொத்தியாம்பாளையத்தில் நடந்த பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா ஆய்வு செய்தார். வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பொறியாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். குளங்கள் துார்வாரப்படுவதால், மழைக்காலத்தில் நீர் தேக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் (Ground Water) உயர வாய்ப்புள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

சளி காய்ச்சலை விரட்டியக்கும் வீட்டு வைத்தியம்

நெற்பயிரின் வளர்ச்சிக்கு நுண்ணுயிர் உரங்கள் அவசியம் தேவை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)