நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 January, 2020 4:15 PM IST

மாசு இல்லா போகி கொண்டாடுவோம்

உலகமெங்கும் உள்ள தமிழர்கள் சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு கொண்டாடும் திருநாள்களில் ஒன்று, பொங்கல் திருநாள். உலகம் வியந்து பார்க்கும் அளவிற்கு அதிசயத் தன்மைகள் இந்த பொங்கல் பண்டிகைக்கு உண்டு. மண்ணை பண்படுத்த விவசாயிகளுக்கு உதவும் கால்நடைகளுக்கும், விதையை விண்ணோக்கி எழச் செய்யும் கதிரவனுக்கும் பொங்கலிட்டு நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர், தமிழர்கள்.

பொங்கல் பண்டிகை

அறுவடைத் திருநாள், தமிழர் திருநாள், உழவர் திருநாள் என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த பொங்கல் கொண்டாட்டங்கள் நான்கு நாட்கள் கடைபிடிக்கப்படுகின்றன. பண்டிகையின் முதல் நாள் போகிப் பண்டிகை, அடுத்த நாள் வாசல் பொங்கல், சூரிய பொங்கல் அல்லது கதிரவன் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் கரிநாள் அல்லது திருவள்ளுவர் நாள் என விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

போகி பண்டிகை

போகி பண்டிகையான இன்று பழையன கழிந்து புதியன புகுதல் என்கிற ஒப்பில்லா கொள்கையின் நீட்சியாய் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் தீயிட்டு கொளுத்துவார்கள். வீட்டிற்கு வெள்ளையடித்து மகிழ்கின்றனர். இன்றைய தினம் தங்களுடைய வீடுகளில் உள்ள எல்லா பழைய கழிவுகளையும் கழித்து அறுவடையாகி இருக்கின்ற புதுநெல்லை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு ஆயத்தமாகின்றனர்.

இன்றைய போகி

பண்டைய தமிழர்கள் கொண்டாடிய போகிப் பண்டிகை இன்றும் பழமை மாறாமல் சில பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்கள் சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதை மறுக்கமுடியாது. இன்று நம்முடைய வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் காற்று மிக மோசமான அளவிற்கு மாசடைகிறது. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதோடு, புகைமூட்டதால் போக்குவரத்து நெரிசல், விமான சேவையில் பாதிப்பு போன்ற பாதக அம்சங்களுக்கும் வழிகோலுகிறது.

கால்நடைகளில் பாதிப்பு

இந்த புகை மூட்டத்தால் மூச்சுக் கோளாறு, கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மூச்சுக் குழல் தொற்று உள்ளவர்கள் தீவிர மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகளுக்கு கால்நடைகளும் விதிவிலக்கு அல்ல. கால்நடைகளும் இது போன்ற பாதிப்புகளுக்கு விதிவிலக்கல்ல. புகை மூட்டத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளால் கால்நடைகளில் நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. கண் எரிச்சல், மூச்சுக் கோளாறு ஏற்படும். பறவைகள் மற்றும் இளம் கன்றுகள்/குட்டிகளில் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த பாதிப்புகள் குறித்து அறிந்து சுற்றுச்சூழலுக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் போகியை கொண்டாடுவோம். நமது கொண்டாட்டங்கள் பிறருக்கு வேதனையை கொடுக்காமல் இருப்பதே நாம் கொண்டாடும் பண்டிகைகளின் உண்மையான அர்த்தமாகும். மாசு இல்லாத போகி; யாருக்கும் கேடு இல்லாத போகி...

சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், 
சென்னை-07

Dr. ச. பாவா பக்ருதீன்
கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி,
குரு அங்கத்தேவ் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
லூதியானா, பஞ்சாப்-141001

English Summary: Pongal 2020: Festivals of Harvest, On this day farmers Thank Sun God and Livestock
Published on: 14 January 2020, 04:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now