மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 January, 2022 6:52 AM IST
Pongal Special Buses

பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளை முதல் ஜனவரி 13-ந் தேதி வரை மொத்தம் 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்துத் துறையின் சிறப்பு ஏற்பாடுகள், சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து கடந்த மாதம் 20-ந் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பொங்கல் சிறப்பு பேருந்து (Pongal Special Bus)

அரசு அறிவுறுத்தியுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நாளை முதல் வரும் 13-ந் தேதி வரை மொத்தம் 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,468 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

வழித்தடங்கள் (Ways To Go)

சென்னை மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள், ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக தஞ்சாவூர், கும்பகோணம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, செஞ்சி, புதுச்சேரி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருத்தணி செல்லும் பேருந்துகள் இயக்கம்.

இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

மேலும் முன்பதிவு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூவிருந்தவல்லி, வெளி சுற்று சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்று தாம்பரம், பெருங்களத்தூரில் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிக் கொள்ளும்.

கார், இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாமல் திருக்கழுக்குன்றனம் செங்கல்பட்டு அல்லது ஶ்ரீபெரும்புதூர்- செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும் என்று தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

பொங்கல் பரிசு இன்று முதல் விநியோகம்: கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!

வீரரோ, காளையோ ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி!

English Summary: Pongal special buses from today! Department of Transportation Announcement!
Published on: 11 January 2022, 06:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now