News

Wednesday, 17 August 2022 06:46 PM , by: T. Vigneshwaran

Post Office Jobs

அரசு வேலை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் மத்திய அரசு. ஆமாம், இந்திய தபால் துறையில் 98,083 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் போஸ்ட்மேன், மெயில் கார்டு மற்றும் பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 9,619 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிடங்களின் விவரம்

போஸ்ட்மேன் (Post Man) – 59,099

மெயில் கார்டு (Mail Guard) – 1445

பன்முக உதவியாளர் (Multi-Tasking Staff) – 37,539

தமிழக காலியிடங்களின் விவரம்

போஸ்ட்மேன் – 6,130

மெயில் கார்டு – 128

பன்முக உதவியாளர் – 3,361

கல்வித் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப செயல்முறை விரைவில் இணையதளத்தில் தொடங்கப்பட உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தேர்வர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: 

தேசியக்கொடியை எப்படி மடித்துப் பாதுகாக்க வேண்டும்?

38,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)