News

Wednesday, 19 October 2022 05:51 PM , by: T. Vigneshwaran

Post Office Scheme

முதலீடு என்பது அனைவருக்கும் மிக அவசியமான ஒன்றாகும். பாதுகாப்பான முதலீட்டின் மூலம், உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். தற்போது, ​​ரிஸ்க் திறனுக்கு ஏற்ப, நாம் முதலீடு செய்யக்கூடிய பல முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. அதிக ரிஸ்க் எடுக்க ஒரு முதலீட்டாளர் தயாராக இருந்தால், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற பங்குகளில் முதலீடு செய்யலாம். பாதுகாப்பான மற்றும் பூஜ்ஜிய அபாய முதலீட்டை விரும்புபவர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் (கிசான் விகாஸ் பத்ரா) சிறந்த தேர்வாக இருக்கும்.

தபால் அலுவலகம் ஒரு நீண்ட கால முதலீடு

தபால் அலுவலக திட்டங்கள் நீண்ட கால முதலீடுகள் ஆகும். இந்தத் திட்டங்கள் பாரம்பரிய முதலீடுகளை விரும்புபவர்கள் மற்றும் நீண்ட கால முதலீடுகளைச் செய்பவர்களுக்கானது. தபால் அலுவலக திட்டங்களில் அரசாங்க உத்திரவாதம் கிடைக்கிறது. அதாவது இதில் எந்த ஆபத்தும் இல்லை. மேலும் முதலீட்டுக்கு உத்தரவாதமான வருமானமும் கிடைக்கும். சிறப்பான அஞ்சல் அலுவலக திட்டமான கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

கிசான் விகாஸ் பத்ர திட்டம் (KVP) என்றால் என்ன

இத்திட்டத்தின் காலம் 124 மாதங்கள் அதாவது 10 ஆண்டுகள் 4 மாதங்கள் ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் 1 ஏப்ரல் 2022 முதல் ஜூன் 30, 2022 வரை முதலீடு செய்திருந்தால், நீங்கள் டெபாசிட் செய்த மொத்தத் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகும்.

எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீட்டில் கிசான் விகாஸ் பத்ரா சான்றிதழை வாங்கலாம். அதாவது இந்தத் திட்டத்தில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் 1988 இல் தொடங்கப்பட்டது, அதன் நோக்கம் விவசாயிகளின் முதலீட்டை இரட்டிப்பாக்குவதாகும். ஆனால் இப்போது இது அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு

ஒரே நாடு ஒரே உரம்’ திட்டம் தொடங்கினார் பிரதம

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)