மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 May, 2023 10:52 AM IST
Postal Department home deliver 19 tonnes of mangoes in Bengaluru

விவசாயிகளிடமிருந்து நேரிடையாக கடந்த ஒரு மாதத்தில் அஞ்சல் துறையின் மூலம் 19 டன் மாம்பழங்கல் ஹோம் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வரை மாம்பழ சீசன் களைக்கட்டும். ஆனால் இந்த ஆண்டு நிலவும் அதிகப்பட்ச வெப்பநிலையால் பல மாநிலங்களில் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையிலும் கர்நாடக மாநிலத்தில் இந்திய அஞ்சல் துறை மூலம் 19 டன் மாம்பழங்கள் ஹோம் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்தப்போதிலும், தற்போது வரை டெலிவரி செய்யும் அளவானது திருப்திகரமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு கொரோனாவினால் பொது முடக்கம் ஏற்பட்ட நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு கர்நாடகா மாநில மாம்பழ வளர்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KSMDMCL), இந்திய அஞ்சல் துறையுடன் கைக்கோர்த்து மாம்பழங்களை தபால் துறை மூலம் டோர் டெலிவரி செய்யும் 'கர்சிரி' என்ற முன்மாதிரி நடைமுறையினை அறிமுகப்படுத்தினர்.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இத்திட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டில் 75 டன் மாம்பழங்களையும், 2022-இல் 70 டன்களையும் டோர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு “குறைவான விளைச்சல் இருந்தபோதிலும், நாங்கள் ஏப்ரல் 5 முதல் மே 12 வரையிலான ஒரு மாதத்தில் 19 டன் மாம்பழங்களை வீட்டிற்கு டெலிவரி செய்துள்ளதாகமூத்த KSMDMCL அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

www.karsirimangoes.karnataka.gov.in என்ற இணையதளத்தில் மாம்பழங்களை ஆர்டர் செய்யலாம். அல்போன்சா, பாதாமி, அபூஸ், பங்கனபள்ளி, கேசர், நீலம், ஹிமாம் பசந்த், செந்தூர் மற்றும் மல்லிகா மற்றும் பல வகையான மாம்பழங்களில் 3 கிலோ வரை ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

வீட்டுக்கு அனுப்பப்படும் மாம்பழங்கள் இயற்கையாகவே பழுக்க வைக்கப்பட்டவை. சந்தைகளில் சில வியாபாரிகள் புற்று நோயை உண்டாக்கும் கால்சியம் கார்பைடு உதவியுடன் இன்றளவும் மாம்பழங்களை பழுக்க வைத்து வருகின்றனர். டோர் டெலிவரி செய்யப்படுபவை இயற்கையாகவே பழுக்கவைக்கப்பட்டவை அல்லது KSMDMC-அங்கீகரிக்கப்பட்ட பழுக்க வைக்கும் அறைகளில் இருந்து வருகின்றன. அங்கு மாம்பழங்களை பழுக்க வைக்க இயற்கை எத்திலீன் வாயுவைப் பயன்படுத்துகின்றன, இந்த நடைமுறை இன்று உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறையாகும்," என்றும் ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, ஹூப்பள்ளி-தர்வாட், மைசூர், பெலகாவி, மங்களூரு, ஹாசன், மாண்டியா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகள் உட்பட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் (31 பின் குறியீடுகளில்) மாம்பழங்களை ஹோம் டெலிவரி செய்து வருவதாகவும், KSMDMCL அதிகாரி தெரிவித்துள்ளார்.

pic courtesy: DH PHOTO BY BK JANARDHAN

மேலும் காண்க:

ஒன்றிய அரசின் நீர்வள பாதுகாப்பு விருது- தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நாமக்கல்

English Summary: Postal Department home deliver 19 tonnes of mangoes in Bengaluru
Published on: 18 May 2023, 10:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now