மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 January, 2023 9:49 PM IST
Postal Savings Plan

அஞ்சலகம் சார்பில் உருவாக்கப்பட்ட சிறுசேமிப்புத் திட்டங்களில் ஒன்று மாதாந்திர வருமானம் ஈட்டும் திட்டமாகும். ஒருகணக்குதாரர் ரூ.1000 அதற்கு மேல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஒருகணக்கு தாரர் ரூ.4.50 லட்சமும், கூட்டுக்கணக்குவைத்திருந்தால் ரூ.9.50 லட்சமும் முதலீடு செய்யலாம். தனிநபர் அதிகபட்சமாக ரூ.4.50 லட்சம் முதலீடு செய்யலாம்.

அதிகபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்

தனி கணக்குதாரராக இருந்தால், மாதாந்திர வருமானம் திட்டத்தில் ரூ.4.50லட்சம் முதலீடு செய்து ஆண்டுக்கு ரூ.29,700 வட்டியாகப் பெறலாம். இந்த தொகையை 12 மாதங்களுக்குப் பிரிக்கலாம். கூட்டுக் கணக்காகஇருந்தால், ரூ.9லட்சம் வரை முதலீடு செய்யலாம். அவ்வாறு முதலீடு செய்யும்போது, ஆண்டுக்கு ரூ.59,400 வட்டி கிடைக்கும். இதை 12 மாதங்களுக்குப் பிரித்து மாத வருமானமாக மாற்றும்போது ரூ.4,950 கிடைக்கும்.

வட்டி எப்படி கிடைக்கும்

கணக்கு தொடங்கிய நாளில் இருந்து ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் வட்டி கணக்கிடப்பட்டு முதிர்வுத்தொகை வரும்வரை வழங்கப்படும். ஒவ்வொரு மாதம் வரும் வட்டிக்கும் கூட்டுவட்டி கிடைக்காது. திட்டத்தில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு அதிகமாக கணக்குதாரர் முதலீடு செய்திருந்தால், அந்தப்பணம் டெபாசிட்தாரரிடம் திருப்பித் தரப்படும். அல்லது, அஞ்சல சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். டெபாசிட் செய்துள்ள பணத்துக்கான வட்டிவீதம் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்.

யாரெல்லாம் திட்டத்தில் சேரலாம்

வயதுவந்தவர்கள் யார் வேண்டுமானாலும் தனிநபர் மாத வருமானத் திட்டத்தில் சேரலாம்.கூட்டுக்கணக்கு தொடங்க 3 நபர்கள் தேவை. குழந்தைகள் பெயரில் தொடங்க, காப்பாளர், அல்லது பெற்றோர் கையொப்பம் தேவை. 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு அவர்கள் பெயரிலேயே கணக்குத் தொடங்கலாம்.

வட்டி எதில் வரவு வைக்கப்படும்

முதலீடு செய்த பணத்துக்கு வட்டி மாதந்தோறும் கணக்குத்தாரரின் எங்கு அஞ்சல சேமிப்புக் கணக்கு தொடங்கியுள்ளாரோ அந்த சேமிப்புக் கணக்கில் சேர்க்கப்படும். ஒருவேளை முதலீடு செய்த அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு இருந்தால் அங்குள்ள கணக்கில் வரவு வைக்கப்படும்.

மேலும் படிக்க:

சீறுநீரகக் கல்லடைப்பு பிரச்னையா? இதை சாப்பிடுங்க!

பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிகட்டு நடத்தப்படுவது ஏன்?

English Summary: Postal Savings Plan for income of Rs.4,950 per month
Published on: 10 January 2023, 09:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now