News

Saturday, 17 July 2021 05:43 AM , by: R. Balakrishnan

Credit : Dinamalar

குஜராத்தில் புனரமைக்கப்பட்ட வாட்நகர் ரயில்வே ஸ்டேஷனை, அங்கு இளமையில் 'டீ' விற்ற நினைவின் நெகிழ்ச்சியுடன், பிரதமர் மோடி (PM Modi) இன்று திறந்து வைத்தார்.

டீ கடை

குஜராத்தில் மெஹ்சானா மாவட்டம், வாட் நகரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில், பல ஆண்டுகளுக்கு முன், மோடியின் தந்தை டீ கடை நடத்தி வந்தார். அப்போது இளம் வயது மோடி, தந்தைக்கு உதவியாக ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்பனை செய்து வந்தார். பிரதமரான பின், மோடி பலமுறை இதை நினைவு கூர்ந்துள்ளார்.

வாட்நகர் ரயில்வே ஸ்டேஷன்

இந்நிலையில், வாட்நகர் ரயில்வே ஸ்டேஷன், தற்போது ரூ. 8 கோடி செலவில் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு நிகரான வசதிகளுடன் புனரமைக்கப்பட்டடுள்ளது. இந்த ஸ்டேஷனை பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' (Video Conference) வாயிலாக திறந்து வைத்தார்.

இவற்றை தவிர புதுப்பிக்கப்பட்ட காந்திநகர் ரயில்வே ஸ்டேஷன், ஆமதாபாத் அறிவியல் நகரில் புதிய பிரிவுகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

மேலும் படிக்க

கண்ணாடி இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் வாரண்டி ரத்து: ஐகோர்ட் அதிரடி

ஜூலை 19 இல் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் வெளியீடு: இணையதளங்களில் பார்க்கலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)